நில உரிமை வழங்க வலியுறுத்தி உடுமலையில் வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட மலைவாழ் மக்கள்!

நில உரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலை பேருந்து நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்ற 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள், வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு அங்கேயே உணவு சமைத்து சாப்பிட்டு தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர்: நில உரிமை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உடுமலையில் வனத்துறை அலுவலகத்தை மலைவாழ் மக்கள் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து 300க்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் உடுமலை வனத்துறையை கண்டித்து ஊர்வலத்தில், ஈடுபட்டனர்.



இதில், 2006 ஆம் ஆண்டு வன உரிமை சட்டப்படி நில உரிமை வழங்க வேண்டும். நிலப்பகுதியில் இருந்து செல்லும் பாதைகளை கான்கிரீட் பாதைகளாக மாற்றம் செய்ய வனத்துறை அனுமதி வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.



பாரம்பரிய இசைக்கருவிகளை வாசித்தபடி நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்ற மலைவாழ் மக்கள் திடீரென வனத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது உடுமலை வனத்துறையை கண்டித்து முழக்கங்களையும் எழுப்பினர்.

மேலும் வனப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாலை அமைக்க அனுமதி அளித்தும், உடுமலை வனத்துறை அதிகாரிகள் அனுமதி வழங்காமல் உள்ளதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.



மலைவாழ் மக்கள் 300க்கும் மேற்பட்டோர் உடுமலை வனத்துறை அலுவலகத்தை முன்னிட்டு சமையல் செய்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் அப்பகுதியில், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மலைவாழ் மக்கள் காத்திருப்பு போராட்டத்தை முன்னிட்டு உடுமலை டிஎஸ்பி சுகுமாரன் தலைமையில் காவல்துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...

குறுந்தொழில்களின் வளர்ச்சிக்காக மானிய நிபந்தனைகளை பரிசீலிக்க அமைச்சர்களிடம் FOCIA மனு

கோவையில் குறுந்தொழில் முனைவோர் மானியம் பெறுவதில் உள்ள தடைகள் மற்றும் தொழில் அமைப்புகளின் பதிவு, புதுப்பிப்பு சிக்கல்களுக...

ஈரான்-இஸ்ரேல் போர் எதிரொலி: 70 டூ 50 டன் - கோவை–ஷார்ஜா சரக்கு கையாளுதலில் சரிவு..!

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக விமானங்கள் கூடுதல் எரிபொருளுடன் இயக்கப்படுவதால், கோவை–ஷார்ஜா விமானங்களில் சரக்கு ஏற்றும் திறன...