GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் - பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் வேதனை!

கோவை பச்சாபாளையம் பகுதியில் பால்பண்ணையை திறந்து வைத்து பேசிய அமைச்சர் மனோ தங்கராஜ், பால் கொள்முதல் விலை உயர்த்த கூறுவதில் நியாயம் இருக்கிறது. ஆனால், தற்போது அனைத்திற்கும் GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் என்றார்



கோவை: அனைத்திற்கும் GST வரி கட்டியே மாய்ந்து போன நிலையில் நாம் இருக்கிறோம் என பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பச்சாபாளையம் பகுதியில் உள்ள மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பால் பண்ணையை தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.



இந்த ஆய்வின் போது அங்குள்ள இயந்திரங்களின் செயல்பாடுகள், அவற்றின் பராமரிப்பு ஆகியவற்றை குறித்து கேட்டறிந்தார். மேலும் பால் பதப்படுத்தப்பட்டு பாக்கெட்டிங் செய்யப்படுவதையும் ஆய்வு செய்தார்.



இந்நிகழ்வில் அங்குள்ள பணியாளர்களிடமும் அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.



அதனைத் தொடர்ந்து சிறந்த பால் உற்பத்தியாளர்கள், சங்க செயலாளர்கள், கருவூட்டுனர்கள், மற்றும் விற்பனையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.



அதன்படி 124 பயனாளிகளுக்கு 2.23 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றிய பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் பேசியதாவது,



ஆவின் ஒரு மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம். இதன் மூலம் பலருக்கும் நன்மைகள் உள்ளது. இத்துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.

ஆவினை பொறுத்தவரை விவசாயிகளுக்கு நியாயமான விலை கிடைக்க வேண்டும், காப்பீடு திட்டத்திலும் ஆக்கப்பூர்வமான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். யார் வேண்டுமென்றாலும் ஆவின் நிர்வாகிகள், அல்லது DR யை சந்தித்து பேசலாம், அவர்கள் உங்களுக்கு முறையாக வழிக்காட்டுவார்கள் என்ற உத்தரவாதத்தை இத்துறையின் அமைச்சராக நான் கூறி கொள்கிறேன்.

விவசாயிகள் தரும் பாலுக்கு விலையை கூட்டி தர வேண்டும் என கூறுவதில் நியாயம் இருப்பதை மறுக்கவில்லை. தற்போது அனைத்திற்கும் GST போட்டு வரி கட்டியே மாய்ந்து போன நிலைமையில் நாம் இருக்கிறோம்.

எங்கெல்லாம் பால் உற்பத்தியாளர்கள் இருக்கிறார்களோ அங்கெல்லாம் சொசைட்டி ஆரம்பிக்கும் பணிகளை செய்ய உள்ளோம். நாம் எடுத்துள்ள முயற்சிகளால் 6% மின் கட்டணம் குறைந்துள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்து செல்கின்ற அரசை தான் முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் என்று கூறுகிறார்.

ஒரு சாரார் மட்டும் பயனடைந்தார்கள் என்று இருக்க கூடாது என்பது தான் இந்த அரசின் கொள்கை. ஒப்பந்த பணியாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் எவ்வளவு வழங்கலாம் என்பதை ஆராய்ந்து வருகிறோம். அனைவரும் இணைந்து இந்த பொதுத்துறையை வலுப்படுத்தும் முயற்சியை மேற்கொள்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...