ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எதிராக போராட சென்ற நந்தினி மற்றும் தீக்ஷனா கைது!

ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அகில இந்திய ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடுவதற்காக சென்ற நந்தினி மற்றும் தீக்ஷனாவை சூலூர் போலீசார் பேருந்தில் வைத்து கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.



கோவை: ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட சென்ற நந்தினி மற்றும் தீக்‌ஷனாவை போலீசார் பேருந்தில் வைத்து கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அகில இந்திய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஊட்டியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இந்நிலையில் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக போராளியான நந்தினி மற்றும் தீக்ஷனா ஆகியோர் சென்று கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில், அவர்கள் இருவரையும் தடுத்து நிறுத்த மதுரையிலிருந்து கோவை வரை போலீசார் சோதனையில் ஈடுபட்டு வந்த நிலையில், சூலூர் போலீசார் பேருந்தில் பயணம் செய்த இருவரையும் தடுத்து நிறுத்தி கைது கைது செய்துள்ளனர்.

பின்னர் இருவரையும் சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர். இருவரையும் கைது செய்வதற்காக போலீசார் அரசு பேருந்துகளை நிறுத்தி சோதனையில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்த...

கோவை குமரகுரு நிறுவனத்தில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி

கோவை குமரகுரு கல்வி நிறுவனங்களில் இந்திய விமானப்படையின் IPEV நடமாடும் கண்காட்சி வாகனம் வருகை தந்தது. 100-க்கும் மேற்பட்ட...

ஏப்ரல் 17: கோவையில் உதயநிதி பிரச்சார அட்டவணை வெளியீடு

2026 தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், ஏப்ரல் 17ஆம் தேதி காலை முதல் இரவு வரை காங்கேயம், உடுமலைப்பேட்டை,...

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தலை முன்னிட்டு மாணவர்களுக்கு தொடர் விடுமுறை அறிவிப்பு

Coimbatore மாணவர்கள் வாக்களிக்க ஊக்குவிக்கும் வகையில், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் தேர்தல் நாளுக்கு முன்பும் பின்பும்...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...

மின் கட்டணக் குறைப்பு உள்பட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்: தொழில் துறையினருக்கு அதிமுக வேட்பாளர்கள் உறுதி

கோவையில் தமிழ்நாடு அனைத்து தொழில் முனைவோர் கூட்டமைப்பு ஏற்பாட்டில் புதன்கிழமை நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில், அதிமுக கூ...