கவனக்குறைவாக சிகிச்சையளித்தால் ஒருவர் பலி - பல்லடம் அருகே செயல்பட்டு வரும் அக்குபஞ்சர் சென்டர் முற்றுகை!

பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் ரிஷி அக்குபஞ்சர் சென்டரில் இருதய சிகிச்சைக்காக வந்த சம்பத் என்பவருக்கு கவனக்குறைவாக சிகிச்சை அளித்ததால் உயிரிழந்ததாக கூறி, அவர்களது உறவினர்கள் அக்குபஞ்சர் சென்டரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூர்: பல்லடம் அருகேயுள்ள ரிஷி அக்குபஞ்சர் சென்டரில் கவனக்குறைவாக சிகிச்சை அளிக்கப்பட்டதால் ஒருவர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் ரிஷி அக்குபஞ்சர் சென்டர் என்ற மினி கிளினிக் ஒன்று கடந்த ஒராண்டிற்கு மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் இந்த அக்குபஞ்சர் சென்டரில் பல்வேறு உடல் உபாதைகளுக்கான சிகிச்சைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு பட்டேல் சாலை பகுதியை சேர்ந்த சம்பத் என்பவர் இருதய அடைப்பு காரணமாக உயிர் இழந்தார். இதற்கு காரணம் இந்த மருத்துவர் ரிஷி என்ற சித்தார்த்தன் என்பவர் அஜாக்கிரதையான முறையில் செயல்பட்டதாக கூறப்படுகிறது.

இறந்த சம்பத் (55) என்பவருக்கு ஆஞ்சியோ செய்த பிறகு சிகிச்சை கொடுத்ததாகவும், ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யாமல் போன் கூட எடுக்காமல் வெளிமாநிலத்தில் இருப்பதாக கூறியதாக தெரிகிறது.

அதனை நம்பி அவரும் காத்திருந்தததன் காரணமாகவே அவர் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் முற்றுகையிட்டனர். மேலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.



இதுதொடர்பான பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...