உடுமலை அருகே ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற நபர் உயிரிழந்த சோகம்!

நேற்றைய தினம் காலை 7.40 மணிக்கு சென்னை ரயிலில் உறங்கிக் கொண்டு வந்த நபர், உடுமலை ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்ட நிலையில், திடீரென குதித்ததால், தவறி விழுந்து, ரயிலுக்கு அடியில் சிக்கி உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


திருப்பூர்: உடுமலை அருகே ஓடும் ரயிலில் இருந்து குதித்த நபர் உடல் துண்டாகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று காலை 7.40 மணிக்கு சென்னை ரயில், உடுமலை ரயில் நிலையத்திற்கு வந்து நின்று புறப்பட்டு சென்றது. அப்போது, ரயில் புறப்பட்ட நிலையில் ரயிலில் இருந்த நபர் ஒருவர், திடீரென வெளியே குதித்துள்ளார். இதனிடையே, அவர் நிலை தடுமாறில் ரயில் சக்கரத்தில் சிக்கிய நிலையில், உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

ரயிலின் கடைசி பெட்டியில் பயணித்த அந்த நபர் உடுமலையை சேர்ந்தவராக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. தூங்கிக் கொண்டு வந்தவர் திடீரென உடுமலை ரயில் நிலையத்தை பார்த்தவுடன் தூக்க கலக்கத்தில் வெளியே குதித்துள்ளார்.

அப்போது ரயில் சிறிது வேகத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சக்கரத்தில் சிக்கி உடல் துண்டாகிய நிலையில் கண் இமைக்கும் நேரத்தில் உயிரிழந்தார். உயிரிழந்த நபர் யார்? என்பது குறித்து, பழனியில் இருந்து வந்த ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...