காய்கறி விலை உயர்வை கண்டித்து கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டம்!

காய்கறி விலை உயர்வை கண்டித்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தக்காளி, கத்திரிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு காய்கறிகள் விலை உயர்வுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.



கோவை: காய்கறி விலை உயர்வை கண்டித்து கோவையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காய்கறி மாலை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கடந்த இரண்டு வாரங்களுக்கும் மேலாக சமையலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் காய்கறிகளான தக்காளி, சின்ன வெங்காயம், இஞ்சி, ஆகியவற்றின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பருவமழை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைவால் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் காய்கறி விலை உயர்வு குறித்து சமூக வலைத்தளங்களில் வலைத்தளவாசிகள் மீம்ஸ் மற்றும் காமெடி வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர். தமிழக அரசு காய்கறி விலையை கட்டுப்படுத்தவும் மக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைப்பதற்கு வழிவகை செய்யவும் பல்வேறு எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று அதிமுக சார்பில் காய்கறிகளின் விலை உயர்வை கண்டித்தும், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும் மாநிலம் தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.



அதன் ஒரு பகுதியாக கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு கோவை மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு தக்காளி, கத்திரிக்காய், இஞ்சி, கறிவேப்பிலை உள்ளிட்ட காய்கறிகளை மாலையாக அணிந்து கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலையை தமிழக அரசு கட்டுப்படுத்த வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...