நூற்பாலைகள், ஜவுளி தொழில் பாதிப்பு குறித்து தொழில் அமைப்புகளுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை!

தமிழக நூற்பாலைகள் மற்றும் ஜவுளி தொழிலில் ஏற்பட்டுள்ள பல்வேறு நெருக்கடிகள் குறித்து தமிழக மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பு (ITF) சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டது.


கோவை: கோவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் நடைபெற்ற நூற்பாலைகள் மற்றும் ஜவுளி தொழில்துறையினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

ஜவுளி மற்றும் நூற்பாலை தொழில் துறைக்கு ஏற்பட்டுள்ள துயரங்களை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து கோவையை சேர்ந்த ஜவுளி தொழில் மற்றும் நூற்பாலை தொழில் அமைப்புகளுடன் தமிழக மின்சாரம் மற்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த ஆலோசனை கூட்டத்தில் இந்திய ஜவுளி தொழில் முனைவோர் கூட்டமைப்பின் (ITF) ஒருங்கிணைப்பாளர் பிரபு தாமோதரன் அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு,

1. ஒட்டுமொத்த ஜவுளி உற்பத்தித்துறை சம்பந்தமான, குறிப்பாக மத்திய நிதி அமைச்சகம் சம்பந்தமான கோரிக்கைகளை, தரவுகளுடன், இந்த ஆண்டின் தொழில் மற்றும் ஏற்றுமதி நிலையையும் கணக்கில் கொண்டு, ஒரு நிதி ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் அறிக்கையை தயார் செய்து தமிழக அரசு அளிக்கலாம்.

2.மற்ற மாநில நூற்பாலைகள் மிக நவீன இயந்திரங்களை அந்தந்த அரசுக்களின் சலுகைகளை பயன்படுத்தி நிறுவி உள்ளதால், அவர்களது உற்பத்தி செலவு நம்மை விட குறைந்து உள்ளதால் நூல் ஏற்றுமதி சந்தையில் தமிழக நூற்பாலைகளால் போட்டியிட இயலாத நிலை உள்ளது.

அடுத்த 10 முதல் 15 ஆண்டுகள் பயன்படுத்தும் அத்தகைய தொழில் நுட்ப மேம்பாட்டுக்கு தமிழக நூற்பாலைகளை தயார்படுத்தும் வகையில் சிறப்பு நிதி உதவித் திட்டத்தை தமிழக அரசு ஆலோசித்து செய்லபடுத்தலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...