கோவை சுந்தரலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய சிலைகளை தண்ணீரில் வைக்கும் நிகழ்வு!

கோவை கதிர்நாயக்கன் பாளையம் லஷ்மி நகர் பேஸ் 3ல் அமைக்கப்பட்டு வரும் சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நிறுவப்படும் திருமேனிசிலைகள் திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் இருந்து சிவனடியார்கள் மற்றும் இறை அன்பர்களின் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு வாகனங்களில் எடுத்து வரப்பட்டு சிலைகள் நீரில் வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.



கோவை: கோவை கதிர்நாயக்கன் பாளையம் பகுதியில் உள்ள சுந்தரலிங்கேஸ்வரர் கோவிலில் புதிய சாமி சிலைகளை தண்ணீரில் வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.



கோவை குருடிமலை அடிவாரம் குருடம்பாளையம் கிராமம் கதிர் நாயக்கன்பாளையம் ஆர் எல் ஜி குடியிருப்பு பகுதி லஷ்மி நகர் பேஸ் 3ல் அமைக்கப்பட்டு வரும் அருள்தரும் சுந்தரவல்லி உடனமர் சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவில் வருகின்ற செப்டம்பர் 17ம் தேதி கும்பாபிஷேகம் விழா நடைபெற உள்ள நிலையில் திருக்கோவிலில் நிறுவப்படும் திருமேனிசிலைகள் திருப்பூர் மாவட்டம் திருமுருகன் பூண்டியில் இருந்து சிவனடியார்கள் மற்றும் இறை அன்பர்களின் முன்னிலையில் பூஜைகள் செய்யப்பட்டு வாகனங்களில் எடுத்து வரப்பட்டது.



இதன் தொடர்ச்சியாக வடமதுரை அருள்மிகு விருந்தீஸ்வரர் திருக்கோவிலில் பூஜைகள் செய்து மேளதாளங்களுடன் மேட்டுப்பாளையம் சாலை தொப்பம்பட்டி, பிரிவு, சர்வோதய காலனி, ஜங்கம் நாயக்கன்பாளையம், தொப்பம்பட்டி வழியாக கதிர் நாயக்கன்பாளையம் விநாயகர் கோவிலுக்கு சென்று பூஜைகள் செய்யப்பட்டது.

மேலும், ஊர் பக்தர்கள் திருமேனி சிலைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி வழிபட்டு விஜயா நகர், பிரைட் ஹோம், வாட்டர் போர்டு காலனி, குரு சக்தி கார்டன், ஏடி காலனி, ரேணுகாபுரம் வழியாக கிரீன் பீல்டில் உள்ள ஞான விநாயகர் கோவிலுக்கு சென்று அங்கும் பூஜைகள் செய்யப்பட்டு திருமேனி சிலைகளுக்கு மஞ்சள் நீர் ஊற்றி பக்தர்களின் படை சூழ ஆர் எல் ஜி குடியிருப்பு பகுதி லட்சுமி நகர் பேஸ் 3ல் உள்ள அருள்தரும் சுந்தரவல்லி உடனுறை சுந்தரலிங்கேஸ்வரர் திருக்கோவிலுக்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு 48 நாட்கள் இறைவனின் திருமேனி சிலைகள் நீரில் வைக்கப்படும் நிகழ்வு நடைபெற்றது.

இதன் தொடர்ச்சியாக இறை அன்பர்கள் வணங்கி தலவிருட்சம் வில்வம், வன்னி மரம் வைக்கப்பட்டது. பின்பு அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.



இதில் ஏராளமான இறையன்பர்களும் சிவனடியார்களும் கலந்து கொண்டு இவ்விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு 27-வது வார்டில் சுகாதார மையம் மற்றும் தூய்மைப் பணிகள் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டல வார்டு 27 பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சுகாதார மையம், குப்பை ச...

கனமழை எச்சரிக்கை: பரளிக்காடு சூழல் சுற்றுலா தற்காலிகமாக மூடல்

காரமடை வனச்சரகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பரளிக்காடு சூழல் சுற்றுலா மையம், வானிலை ஆய்வு மையம் விடுத்த கனமழை எச்சரிக்கையை...

கோயம்புத்தூர் மாநகராட்சி பொதுஇடங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், பொதுஇடங்கள், பூங்காக்கள் மற்றும் சாலைகளில் கட்டுமான நிறுவனங்கள்...

கோவை விமான நிலைய வளாகத்தில் குடிநீர், கழிப்பிடம் பராமரிப்பில் அலட்சியம் - பயணிகள் புகார்

கோவை சர்வதேச விமான நிலைய நுழைவாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் இயந்திரம் மற்றும் கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்...

தவெக ஆதரவு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பதவி பறிப்பு!

தவெகாவுக்கு ஆதரவு அளித்த அதிமுக நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது கட்சித் தலைமையகம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக...

குறிச்சி அணைக்கட்டு கால்வாயில் தூர்வாரும் பணிகளை ஆட்சியர் ஆய்வு

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் க.கிரியனப்பவர் மற்றும் மாநகராட்சி ஆணையாளர்  மா சிவகுரு பிரபாகரன் குறிச்சி அணைக்கட...