பாமக நிறுவனர் ராமதாஸ் 85வது பிறந்தநாள் - உடுமலையில் பாமக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்!

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸின் 85 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு திருப்பூர் மேற்கு மாவட்ட பாமக சார்பில் உடுமலை உள்பட 10க்கும் மேற்பட்ட பகுதிகளில் கட்சி கொடியை ஏற்றி கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி உற்சாகமாக கொண்டாடினர்.



திருப்பூர்: பாமக நிறுவனர் ராமதாஸ் 85வது பிறந்தநாளை முன்னிட்டு உடுமலை சுற்றுவட்டார பகுதிகளில் பாமக சார்பில் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் 85 ஆவது பிறந்த நாளை நேற்றைய தினம் கொண்டாடினார்.



இதனை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் அக்கட்சி பிரமுகர்கள் கட்சி கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர்.



இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட உடுமலை, மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிகளில் கிழவன் காட்டூர், குமரலிங்கம், எளைய முத்தூர், வாளவாடி உட்பட பத்துக்கு மேற்பட்ட இடங்களிலும் கொண்டாடப்பட்டது.



இந்த நிகழ்வில், பாமக கொடி ஏற்றியும் மரக்கன்றுகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாடப்பட்டது.



இதில், திருப்பூர் மேற்கு மாவட்ட செயலாளர் இரா.பழனிச்சாமி, மாவட்டத் தலைவர் சிங்காரவேல், உழவர் பேரியக்க மாவட்ட செயலாளர் பழனிச்சாமி ,உடுமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவபாலு மாவட்ட ஊடக பேரவை செயலாளர் கனகராஜ், பணிக்குழு செயலாளர் மருத முத்து, மாவட்ட அன்புமணி தம்பிகள் படை தலைவர் மகாலிங்கம்,ஓன்றிய தேர்தல் பணிக்குழு செயலாளர் காளிமுத்து, ஓன்றிய அன்பு மணி தம்பிகள் படை செயலாளர் சாமிநாதன், ஓன்றிய கொள்கை விளக்க அணி செயலாளர் குமார் என்கிற சிவக்குமார், மாவட்ட கொள்கை விளக்க அணி செயலாளர் ராமலிங்கம் அன்புமணி தம்பிகள் படை வெங்கடேஷ், கோபாலகிருஷ்ணன், ரவிச்சந்திரன், நந்தகோபால், பாலகிருஷ்ணன், முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...