மணிப்பூர் கலவரத்தை கட்டுப்படுத்த கோரி கோவையில் மணிப்பூர் மக்கள் ஆர்ப்பாட்டம்!

மணிப்பூரில் நடைபெற்று வரும் கலவரத்தை கட்டுப்படுத்த கோரியும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் பகுதியில் வசித்து வரும் மணிப்பூர் மக்கள், பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், அங்கு அமைதி நிலவ வேண்டியும் கோவை வாழ் மணிப்பூர் மக்கள் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூரில் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக இரு தரப்பினர் இடையே கலவரம் நடைபெற்று வருகிறது. இதில் நூற்றுக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளதாகவும் ஆயிரக்கணக்கான மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே மணிப்பூரை சேர்ந்து இரு பெண்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமை சம்பவம் நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. மணிப்பூரில் நிலவும் இந்த கலவரத்திற்கு பாஜக அரசு தான் காரணம் என கூறி பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.



இந்நிலையில் கோவை சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் பகுதியில் கோவையில் வசிக்கும் மணிப்பூர் மக்கள், மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும் அங்கு அமைதி நிலவ வலியுறுத்தியும், பெண்கள் மீதான வன்கொடுமை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டித்தும் குழந்தைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் "Justice Delayed is Justice Denied, Hang Rapist, Our Future Not Safe in Manipur, Pray For Manipur Violence" உள்ளிட்ட பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவையில் மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப் போட்டி: 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு

கோவையில் உள்ள கங்கா முதுகுத்தண்டு காயம் மறுவாழ்வு மையத்தில் நடைபெற்ற தமிழ்நாடு மாநில அளவிலான பாரா மேசைப்பந்து தரவரிசைப்...

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...