போலி ஆடியோ வெளியிட்டு வதந்தி பரப்புவதாக கோவை மாவட்ட தி.மு.க. செயலாளர் புகார்!

கட்சி தலைமை குறித்து அவதூறாக பேசுவதாக போலி ஆடியோவை வெளியிட்டு தம் மீது அவதூறு பரப்பும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, கோவை காவல் ஆணையரிடம் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார்.



கோவை: போலி ஆடியோ வெளியிட்டு வதந்தி பரப்புவதாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் தி.மு.க.மாநகர் மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் புகார் மனு அளித்துள்ளார்.

கோவை மாநகர் மாவட்ட தி.மு.க. செயலாளராக இருப்பவர் நா.கார்த்திக். இவர் பேசியதாக சமூக வலைத்தளங்களில் ஆடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. அந்த ஆடியோவில் கட்சி தலைமை, அமைச்சர்கள் மற்றும் கோவை மாநகராட்சி மேயர் உள்ளிட்டோரை விமர்சித்து பேசுவதாக இருந்தது. இந்த ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியதால். தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்த நிலையில் மாநகர் மாவட்ட செயலாளர் கார்த்திக், இந்த ஆடியோவிற்கு கண்டனம் தெரிவித்து, போலி ஆடியோவை தயார் செய்து தன் மீது சிலர் அவதூறு பரப்புவதாக தெரிவித்து கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் மனு அளித்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் அவர் கூறிய தாவது:-

நான் தி.மு.க.வில் மாணவர் அணி, இளைஞர் அணி மற்றும் கட்சியில் பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்துள்ளேன். மாநகராட்சி துணை மேயர், எம்.எல்.ஏ. உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளேன்.

தி.மு.க.வின் வளர்ச்சிக்கும், கொள்கைக்கும் குந்தகம் ஏற்படாமல் தி.மு.க. தொண்டர்களையும், பொதுமக்களையும் அரவணைத்து செயல்படுகிறேன். கடந்த அதிமுக ஆட் சியின் போது என் மீது பொய்யாக 39 வழக்குகள் போட்டனர். அந்த வழக்குகளை சட்ட ரீதியாக சந்தித்து வருகிறேன்.

எனது பணிகளை கண்டு பொறாமைப்பட்டு சில சமூக விரோதிகள், நான் பேசியதாக போலி ஆடியோவை தயார் செய்து வதந்தி பரப்ப வெளியிட்டுள்ளனர். இந்த பொய்யான அவதூறான ஆடியோவை வெளியிட்ட சமூக விரோதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர போலீசாரிடம் புகார் அளித்துள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...