கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனில் பெட்ரோல் கொடுக்க முடியாது எனக் கூறிய பங்க் ஊழியரை தாக்கிய சம்பவம் குறித்து அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.


கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில், அரசு விதிமுறையின்படி பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகவலின்படி, நேற்று இரவு காந்திபுரம் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கிற்கு வந்த நபர் ஒருவர், பாட்டிலில் பெட்ரோல் வழங்குமாறு கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால், அரசு விதிமுறைகளை காரணம் காட்டி பெட்ரோல் பங்க் ஊழியர் பிரகாஷ் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர், தன்னை அமைச்சர் சம்பத்குமார் உறவினர் எனக் கூறியபடி, ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் அவரை தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் காயமடைந்த பிரகாஷ், கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட பிரகாஷ் அளித்த புகாரின் பேரில், காட்டூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அமைச்சர் சம்பத்குமார் தரப்பில் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில், "கோவையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில், பாட்டிலில் பெட்ரோல் வழங்க மறுத்த ஊழியர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளன. சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு பொதுமக்களின் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல்களில் யார் ஈடுபட்டாலும், அவர்கள் மீது மாண்புமிகு முதல்வர் விஜய் தலைமையிலான அரசு எவ்வித சமரசமும் இன்றி உரிய சட்ட நடவடிக்கை எடுக்கும்.

பொதுமக்கள் மற்றும் உழைக்கும் மக்களுக்கு அச்சுறுத்தலாக செயல்படுபவர்களுக்கு இந்த அரசு ஒருபோதும் துணை நிற்காது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்டுவதிலும், அராஜகத்தை ஒடுக்குவதிலும் அரசு எந்தவித சமரசமும் செய்யாது. தவறு செய்தவர் யாராக இருந்தாலும், உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...