மணிப்பூரில் பெண்கள் வன்கொடுமை - கோவையில் காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி தீபம் ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டம்!

மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான மனித உரிமை மீறலை தடுக்க தவறிய பாஜக அரசை கண்டித்து, கோவை ரயில் நிலையம் எதிரே மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: மணிப்பூர் கலவரம் மற்றும் பெண்கள் மீதான மனித உரிமை மீறலை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில், மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மணிப்பூர் மாநிலத்தில் பெண்கள் இருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஆடைகளை அகற்றி ஊர்வலமாக அழைத்துச் சென்று மனித உரிமை மீறல் செயலை தடுக்க தவறிய இன வெறியை ஊக்குவிக்கும் மத்திய பாரதிய ஜனதா அரசை கண்டித்து கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை ரயில் நிலையம் எதிரே உள்ள காமராஜ் பவனில் கோவை மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மெழுகுவர்த்தி ஏற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், மாவட்ட தலைவர் வழக்கறிஞர் கருப்புசாமி முன்னிலை வகித்தார்.



இந்நிகழ்வில் அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சி மாவட்ட நிர்வாகிகள், டிவிஷன் தலைவர்கள் இளைஞர் அணியினர், வழக்கறிஞர் அணியினர் மகிளா காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...