வால்பாறை அருகே நீர்தேக்க தொட்டியில் கடமான் விழுந்து பலி!

அக்காமலை பகுதியில் நீர்த்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த நிலையில் வனத்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து கடமானின் உடலை மீட்டு பிரேதபரிசோதனை செய்து உடலை புதைத்தனர். மேலும் மற்ற விலங்குகள் துரத்தியதால், கடமான் தவறி விழுந்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: வால்பாறை அடுத்த அக்காமலை எஸ்டேட் பகுதியில் நீர்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே அக்காமலை பகுதியில் நீர்தேக்க தொட்டி உள்ளது. வனப்பகுதியில் இருந்து வரும் ஆறு கருமலை எஸ்டேட் பகுதியில் நீர் தேக்கப்பட்டு குடிநீராக வால்பாறை பகுதிக்கு குழாய் மூலம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று காலை நீர்த்தேக்க தொட்டியில் கடமான் ஒன்று தண்ணிரில் விழுந்து வெளியே வர முடியாமல் தவிப்பதாக 12 வார்டு உறுப்பினர், வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் அளிக்கப்பட்டது,

சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு துறையினரும், வனத்துறையினரும் நீர்தேக்க தொட்டி அருகே சென்று பார்த்தபோது கடமான் ஒன்று இறந்த நிலையில் கிடந்தது. மேலும் வால்பாறை நகராட்சி பொறியாளர் தலைமையில்.



தூய்மை பணியாளர்கள் உதவியுடன் தீ அணைப்பு துறையினர் தண்ணீரில் சென்று கடமானின் உடலில் கயிறு கட்டி தண்ணீரில் இருந்து உடலை மீட்டனர்.

வனப்பகுதி அருகே செந்நாய் மற்றும் சிறுத்தைகள் கட மானை வேட்டையாட துரத்திச் செல்லும் பொழுது தண்ணீரில் தவறி விழுந்திருக்கலாம் என்றும் கட மானின் வயது 5 இருக்கலாம் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். வனத்துறையினர் இறந்த கடமானை உடற்கூறாய்வு செய்து புதைத்தனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...