மகளிர் உரிமைத் தொகை திட்ட நிதி சர்ச்சை - தேசிய பட்டியலின ஆணையத்தின் கடிதம்!

பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு மகளிர் உரிமை திட்டத்திற்காக பயன்படுத்துகிறதா என விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு பட்டியலின ஆணையத்தின் கடிதம் அனுப்பியுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலர் மற்றும் ஆளுநரின் செயலர் உள்ளிட்டோர் 15 நாட்களில் விளக்கமளிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


சென்னை: பட்டியலின மக்களுக்கான நிதியை தமிழக அரசு மகளிர் உரிமை திட்டத்திற்காக பயன்படுத்துகிறதா என விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு பட்டியலின ஆணையத்தின் கடிதம் அனுப்பியுள்ளது.

கடந்த 2021 சட்டசபை தேர்தலில் திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், திமுக ஆட்சிக்கு வந்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் உரிமை தொகையாக ரூ. 1,000 வழங்கப்படும் என தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், மகளிர் உரிமை தொகை வழங்கும் திட்டம், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாளான, செப்.,15ல் துவக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, 7,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், பட்டியலின மக்களுக்கான நிதியை மகளிர் உரிமை தொகை திட்டத்திற்காக தமிழக அரசு மாற்றியுள்ளதாக இந்திய குடியரசு கட்சியின் மாநில பொதுச்செயலர் அன்புவேந்தன், தேசிய பட்டியலின ஆணையத்தில், புகார் அளித்திருந்தார்.

இதுதொடர்பாக, ஆணைய இயக்குனர் ரவிவர்மன், தமிழக அரசு, தலைமை செயலர் மற்றும் ஆளுநரின் தலைமை செயலருக்கு இதுதொடர்பாக விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், 15 நாட்களுக்குள் தகுந்த ஆதாரங்களுடன், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். தவறினால், சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி, நீதிமன்றம் வாயிலாக சம்பந்தப்பட்டவர்கள், ஆணையம் முன் நேரில் ஆஜராக, 'சம்மன்' அனுப்பப்படும்.

இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...