பல்லடம் அருகே மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 கேட்டு கூலி தொழிலாளியிடம் டாஸ்மாக் விற்பனையாளர் வாக்குவாதம் - பரபரப்பு

பல்லடம் அடுத்த செட்டிபாளையம் சாலையில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில் மது வாங்க வந்த கூலி தொழிலாளியிடம் விற்பனையாளர் குவாட்டர் பாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 தர வலியுறுத்தியதால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குவாட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் கேட்டு டாஸ்மாக் விற்பனையாளர் கூலித் தொழிலாளியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



பல்லடம் அருகேயுள்ள செட்டிபாளையம் சாலையில் 1830 எண் கொண்ட டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது. பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி இப்பகுதியில் செயல்பட்டு வரும் கடையை மூடக்கோரி வரும் 8 ஆம் தேதி பொதுமக்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

தேசிய நெடுஞ்சாலையில் இருந்து சுமார் 20 அடி தொலைவில் குடியிருப்புக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் அமைந்த பகுதியில் செயல்பட்டு வரும் இந்த டாஸ்மாக் கடைக்கு மதுபாட்டில் வாங்க வந்த கூலித்தொழிலாளியிடம் விற்பனையாளர் குவாட்டருக்கு கூடுதலாக 10 ரூபாய் கேட்டுள்ளார்.



அதற்கு தொழிலாளி பதிலடி கொடுக்கும் விதமாக அமைச்சரே பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்க கூடாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறார் என கேட்டார். அதற்கு டாஸ்மாக் கடை விற்பனையாளர் கூறும் போது அமைச்சர் சொன்னது அடுத்த மாதத்தில் இருந்து தான் வாங்க கூடாது என கூறியிருப்பதாக கூறி கொடுத்த குவாட்டர் பாட்டிலை வாங்கி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.

பின்னர் தொழிலாளி வாக்குவாதத்தில் ஈடுபடவே ஒரு கட்டத்தில் விற்பனையாளர் பணத்தை திருப்பி கொடுத்துள்ளார். சம்பவம் குறித்து பேசிய வாடிக்கையாளர் அமைச்சரே கூலித்தொழிலாளியின் உடம்பு வலிக்கு குடிப்பதாக கூறியிருப்பதாக ஆறுதல் வார்த்தை கூறியிருக்கும் நிலையில், டாஸ்மாக் ஊழியர் அடாவடியாக நடந்துகொள்வதாக வேதனை தெரிவித்தார்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...