காருக்குள் இருந்த கொம்பேரி மூக்கன் பாம்பு - லாவகமாக மீட்டு வனத்துறையிடம் ஒப்படைப்பு!

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த காரில் பாம்பு இருப்பதை கண்ட ஓட்டுனர், பாம்பு பிடி வீரர் உதவியுடன் கொம்பேரிமூக்கன் பாம்பை பத்திரமாக பிடித்து பாட்டிலில் அடைத்து வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.


கோவை: பாப்பநாயக்கன் பாளையம் அருகே காருக்குள் புகுந்த கொம்பேரி மூக்கன் பாம்பு பத்திரமாக பிடிக்கப்பட்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

கோவையில் பாப்பநாயக்கன் பாளையம் பகுதி சேர்ந்த ஒருவர் தனது காரை சாலையில் ஓட்டிச் சென்றுள்ளார். சாலையில் கார் பயணித்துக் கொண்டிருந்த பொழுது, மழை நீர் வடிக்கும் வைப்பர் மீது பாம்பு ஒன்று எட்டிப் பார்த்து உள்ளது.

இதைப் பார்த்த அந்த காரின் உரிமையாளர், சிங்காநல்லூரில் உள்ள ஷோரூம் ஒன்றுக்கு ஓட்டிச் சென்று இருக்கின்றார். ஷோரூமில் இருந்து பாம்பு பிடி வீரருக்கு தகவல் தரப்பட்டது.

வன உயிர் மற்றும் இயற்கை பாதுகாப்பு அறக்கட்டளை அமைப்பைச் சார்ந்த பாம்பு பிடி வீரரும், வழக்கறிஞருமான சித்ரன் விரைந்து சென்று காரில் வைப்பர் பகுதியில் பதுங்கி இருந்த பாம்பை பத்திரமாக பிடித்தார். அந்த பாம்பு கொம்பேரி மூக்கன் பாம்பு என்றும் பிடிக்கப்பட்ட பாம்பை அவர் பாட்டிலில் அடைத்து வனத்துறையிடம் பாதுகாப்பாக ஒப்ப்படைத்தார்.

வனத்துறையினர் அதனை வனபகுதியில் விடுவித்தனர். மேலும் குறிப்பாக காரில் பாம்பு புகுந்து விட்டால் உடனடியாக தண்ணீர் பீச்சு அடிப்பதோ அல்லது மண்ணெண்ணெய் ஊற்றி வெளியே வரவைக்க முயற்சி செய்வதோ கூடாது.

பாம்பு பிடி வீரர்களுக்கு தகவல் தெரிவித்தால் உடனடியாக அவர்கள் விரைந்து சென்று பாம்பை பாதுகாப்பாக மீட்பார்கள் என்றும் காருக்குள் புகுந்த பாம்பை விரட்டும் நோக்கில் பொதுமக்கள் தன்னிச்சையாக செயல்படக் கூடாது என வன உயிரியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...