முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா - சப்பாத்தியில் கருணாநிதியின் உருவத்தை வரைந்த ஓவிய கலைஞர்!

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா அரசு சார்பில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதனையொட்டி கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற ஓவிய கலைஞர், சப்பாத்தியில் கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார்.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே சப்பாத்தியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவத்தை வரைந்து ஓவிய கலைஞர் ஒருவர் அசத்தியுள்ளார்.

மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுகவின் முன்னாள் தலைவருமான மு.கருணாநிதியின் 100வது பிறந்த நாளை ஒட்டி கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அரசு சார்பிலும் திமுக கட்சியின் சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த UMT ராஜா என்ற ஓவிய கலைஞர், சப்பாத்தியில் கருணாநிதியின் உருவத்தை வரைந்து அசத்தியுள்ளார். ஒரு சிறிய அளவிலான இரும்பு கம்பியை நெருப்பில் காய்ச்சி அதன் மூலம் சப்பாத்தியில் கலைஞரின் ஓவியத்தை வரைந்துள்ளார்.

இதனை செய்வதற்கு சுமார் 3 மணி நேரம் எடுத்துக் கொண்டதாக கூறியுள்ள அவர், வரைந்த ஓவியத்தில் கலைஞர் மு.கருணாநிதியின் முகமும், அதன் கீழ் "கலைஞர் 100" என்ற வார்த்தையும் இடம்பெற்றுள்ளது.

இவர் இதற்கு முன்னதாகவே பல்வேறு மைக்ரோ ஆர்ட்டுகளை (Micro Art) தங்கத்தில் செய்து அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...