துடியலூர் அருகே கத்தியை காட்டி வழிப்பறியில் ஈடுபட முயன்ற நபர் கைது!

துடியலூர் - வெள்ளக்கிணர் சாலையில் ரயில்வே கேட் அருகே நடந்து சென்று கொண்டிருந்த சசிக்குமார் என்பவரை கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்ற ஜீவானந்தம் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: துடியலூர் அருகே சாலையில் நடந்து சென்றவரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சசிக்குமார், இவர் தற்போது கோவை துடியலூரில் தங்கி பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்று உணவு சாப்பிடுவதற்காக துடியலூர் வெள்ளக்கிணர் சாலையில் ரயில்வே கேட் அருகே நடந்து சென்றுள்ளார்.

அப்போது அங்கு வந்த நபர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளார். சசிக்குமார் பணம் தர மறுக்கவே கெட்ட வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றுள்ளார்.

இதுகுறித்து சசிக்குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த துடியலூர் போலீசார் கத்தியை காட்டி மிரட்டியதாக நல்லாம்பாளையத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...