உலக தாய்ப்பால் வாரம் - விழிப்புணர்வு ஏற்படுத்திய செவிலியர்கள்!

கோவை ESI மருத்துவமனையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு, INNER WHEEL CLUB-ன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், செவிலியர்கள் கலந்து கொண்டு தாய்ப்பாலின் முக்கியத்துவம் மற்றும் அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



கோவை: உலக தாய்ப்பால் வாரத்தையொட்டி கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமான செவிலியர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவையில் INNER WHEEL CLUB-ன் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் விதமாக இன்றைய தினம் தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெறது.



கோவை ESI மருத்துவமனையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கோவை IWC, கோவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு IWC, கோவை சினெர்ஜியின் IWC உள்ளிட்ட அமைப்புகள் கலந்து கொண்டு மருத்துவமனையில் பாலூட்டும் தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் முக்கியத்துவம், அதன் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் இந்நிகழ்வில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்தான பொருட்கள் அடங்கிய தொகுப்பையும் வழங்கினர்.



அதனைத் தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.



இதில் ஏராளமான ஒரு கலந்து கொண்டு தாய்ப்பால் வாரம் குறித்தும் தாய்ப்பாலின் நன்மைகள் குறித்தும் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி பேரணி மேற்கொண்டனர்.



இந்நிகழ்வில் மருத்துவமனை செவிலியர்கள் சினிமா பாடல்களுக்கு நடனமாடி உற்சாகப்படுத்தியது அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

Newsletter

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...