வனத்தில் யானைகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு வரப்பட உள்ளது - அமைச்சர் மதிவேந்தன் தகவல்!

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் 'தமிழ்நாடு யானைகள் மாநாடு 2023' நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், யானைகளை பாதுகாக்க புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வரப்பட உள்ளது என்றார்.



கோவை: வனத்தில் யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளதாக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் தெரிவித்துள்ளார்.

கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் அரங்கில் 'தமிழ்நாடு யானைகள் மாநாடு 2023' நேற்று தொடங்கியது.



இந்த துவக்க விழாவில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி, வனத்துறை முதன்மை செயலாளர் சுப்ரியா சாஹூ, கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



மாநாட்டை துவக்கி வைத்த அமைச்சர் மதிவேந்தன் அங்கு அமைக்கப்பட்டிருந்த அரங்குகளை பார்வையிட்டார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மதிவேந்தன் பேசியதாவது,



முதல் முறையாக தமிழ்நாட்டில் யானைகளுக்கு கருத்தரங்கம் நடத்தி உள்ளோம். இதில், வனத்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். யானையின் வாழ்விடம், வாழ்க்கை குறித்த கலந்துரையாடல் நடைபெறுகிறது. இது இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே இதுபோன்ற கருத்தரங்கம் எங்கும் நடக்கவில்லை. வனத்தை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். அதில் குழு அமைத்தும் ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.

தமிழ்நாட்டில் யானை எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. யானைகளை பாதுகாப்பதில் புதிய தொழில்நுட்பங்களை கொண்டு வர உள்ளோம். அவுட்-காய் (நாட்டு வெடி) போன்ற விடயங்களை தவிர்க்கவும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியில் வனத்துறையில் ஈடுபடுத்தபட்டுள்ளது.

காடுகளை பாதுகாக்க நாம் பணிகளை முன்னெடுக்க வேண்டும். வன ஆக்கிரமிப்பு குறித்து மாவட்ட நிர்வாகத்துடன் இணைத்து ஆய்வு மேற்கொண்டுள்ளோம்.தடாகம் பகுதியை நேரில் சென்று ஆய்வு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...