உடுமலையில் உலக சாதனைக்காக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் கோலாகலம்..! - 2000 கலைஞர்கள் பங்கேற்று அசத்தல்

உடுமலை அருகே உலக சாதனைக்காக நடைபெற்ற பவளக்கொடி வள்ளி கும்மியாட்டத்தில் இராண்டாயிரம் கலைஞர்கள் கலந்துகொண்டு உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடினர்.



திருப்பூர்: அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒன்றாக பவளக்கொடி வள்ளி கும்மியாட்டம் கோலாகலமாக நடைபெற்றது. இந்த அசத்தல் ஆட்டத்தை ஏராளமானோர் ஒன்றுகூடி ஆரவாரத்துடன் கண்டுகளித்தனர்.



திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள மலையாண்டி கவுண்டனூர் பகுதியில் சக்தி கலைக்குழுவின் பொன்விழா அரங்கேற்றத்தை முன்னிட்டு உலக சாதனை நிகழ்வாக சுமார் 2000 கலைஞர்கள் பங்குபெறும் பவள கொடி கும்மியாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.



அழிந்து வரும் பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சக்தி கலை குழு ஆசிரியர் மகாலிங்கம் தலைமையில் பள்ளியொன்றில் நடைபெற்ற பள்ளி கும்மி ஆட்டத்தில் நாட்டுப்புற பாடல்கள், பாரதிதாசன், பாரதியார் பாடல்கள், திரைப்பட தத்துவ பாடல்கள் உட்பட கருத்துமிக்க பாடல்கள் இடம்பெற்றன.



குறிப்பாக ஆண்கள், பெண்கள் அனைவரும் காலில் சலங்கை கட்டி பவளக்கொடி வள்ளி கும்மி ஆட்டம் ஆடி அசத்தினர்.



உருமி இசைக்கு ஏற்றவாறு ஆடிய வள்ளி கும்மி ஆட்டத்தை ஏராளமானோர் கண்டுகளித்தனர்.

பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், சட்டமன்ற உறுப்பினர்கள் மகேந்திரன், ஈஸ்வரன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், உடுமலை நகராட்சி முன்னாள் தலைவர் சி வேலுச்சாமி, சக்தி கலைகுழு ஆசிரியர் மகாலிங்கம், கண்ணமநாயக்கனூர் ஊராட்சி தலைவர் கருப்பாயி, ஆண்டியகவுண்டனூர் ஊராட்சி மன்ற தலைவர் மோகன வள்ளி ராஜசேகரன், ரயில்பயணிகள் ஆலசோணை குழு உறுப்பினர் உடுமலை சத்யம் பாபு, உடுமலை ஓன்றிய துணை செயலாளர் உரல்பட்டி சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...