நாங்குநேரியில் பள்ளி மாணவன் மீதான தாக்குதல் சம்பவம் - கோவையில் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மனு!

நாங்குநேரியில் ஜாதி ரீதியிலான வன்மத்துடன் நடத்தப்பட்ட தாக்குதலில் பள்ளி மாணவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவ போல், மீண்டும் நிகழா வண்ணம் நடவடிக்கை எடுக்க கோரி கோவை ஆட்சியரிடம் சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபை சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.


கோவை: நாங்குநேரி சம்பவம் போல் மீண்டும் நடக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கடந்த ஒன்பதாம் தேதி ஜாதி ரீதியிலான வன்மத்துடன் பள்ளி மாணவர் ஒருவரை சக மாணவர்கள் அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.

இதில் பாதிக்கப்பட்ட மாணவருக்கு அரசு சார்பில் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பள்ளி கல்லூரிகளில் மாணவர்களிடையே சாதி, மத ரீதியான பாகுபாடுகளை அகற்றும் வண்ணம் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

இந்த அமைப்பின் கோவை மாவட்ட தலைவர் ராகுல் காந்தி தலைமையில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது,

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் சேர்க்கை படிவத்தில் சாதி மத பிரிவு விவரங்கள் பெறுவதை அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் முற்றிலுமாக அகற்ற வேண்டும். இட ஒதுக்கீடு மற்றும் கல்வி சலுகைகள் ஆகியவை குடும்ப வருவாய் சான்று அடிப்படையில் வழங்க வேண்டும்.

பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் சேர்க்கைகள் இந்தியன் என்ற ஒரு அடையாளத்தில் வழங்கப்படும் என்ற திட்டத்தை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடமும் பள்ளி கல்லூரிகளிலும் அரசு சார்பில் விரைவான சர்வே நடத்தப்பட வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.

தங்களின் இந்த கோரிக்கைகளை தமிழக அரசும் மத்திய அரசும் உடனடியாக செயல்படுத்த மாவட்ட ஆட்சியர் உதவி புரிய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்; 4 பேர் கைது

கோவை மாநகரில் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலைப் பொருட்கள் விற்பனையை தடுக்க போலீசார் நடத்திய சோதனையில், வெவ்வேறு...

மருதமலை கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா கோலாகலமாக தொடக்கம்

கோவை மருதமலை அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு அபிஷேகம், ராஜ அலங்காரம் மற்றும் த...

கோவை மத்திய சிறையில் பரபரப்பு; சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளி கார்த்திக் மீது சக கைதிகள் தாக்குதல்

சூலூர் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் குண்டர் சட்டத்தின் கீழ் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டி...

மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு: கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - கோவையில் அமைச்சர் வன்னியரசு எச்சரிக்கை

ஒண்டிப்புதூர் மாணவிகள் விடுதிகளில் தரமற்ற உணவு வழங்கப்பட்ட புகாரை அடுத்து அமைச்சர் வன்னியரசு இன்று ஆய்வு மேற்கொண்டார். ம...

கோவை அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் திடீர் ஆய்வு நடத்திய அமைச்சர் சம்பத்குமார்

கோவை அரசு மருத்துவமனையில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நள்ளிரவில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாது...

சிறுவாணி அணை நீர்மட்டம் 8 அடியாக வீழ்ச்சி: ஆகஸ்ட் வரை இருப்பு

கோவை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமான சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8 அடியாக சரிந்துள்ளது. இருப்பினும், தற்போது உள்ள நீர்...