அலங்கியத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரருக்கு - மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி!

தாராபுரம் அடுத்த அலங்கியம் பகுதியை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் கேசவன் என்பவர் விபத்தில் சிக்கி உயிரிழந்த நிலையில், அவரது உடலுக்கு ஓய்வு பெற்ற முன்னாள் ராணுவ வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி செலுத்தினர்.



திருப்பூர்: தாராபுரம் அடுத்த அலங்கியத்தில் விபத்தில் உயிரிழந்த முன்னாள் ராணுவ வீரருக்கு ஓய்வுபெற்ற ராணுவ வீரர்கள் மூவர்ணக் கொடியுடன் அஞ்சலி செலுத்தினர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜ் நகரை சேர்ந்தவர் கேசவன் (56). இவர் முன்னாள் இந்திய ராணுவ வீரரும் தற்போது காங்கயம் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் வாகன ஓட்டுனராகவும் பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் கேசவன் தனது மனைவி பரிமளா (46) மற்றும் குடும்பத்தினருடன் நேற்று காலை தாராபுரத்தில் இருந்து புறப்பட்டு முத்தூர் அருகே உள்ள ராசாத்தாவலக கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்கு சென்றுள்ளார்.



இந்தநிலையில் கேசவன் நேற்று மதியம் 3.30 மணிக்கு கோவில் முன்புறம் சாலையோரத்தில் நடந்து சென்றார். அப்போது முத்தூரில் இருந்து காங்கேயம் நோக்கி சென்ற கார் ஒன்று எதிர்பாராத விதமாக கேசவன் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த கேசவனை குடும்பத்தினர் மற்றும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

அங்கு கேசவனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில் அவரது உடல் தாராபுரம் அருகே உள்ள அலங்கியம் காமராஜர் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு அங்கு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.



அப்போது ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற கேசவனுக்கு முன்னாள் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் முன்னாள் ராணுவ வீரர் மயில்சாமி தலைமையில் மூவர்ண கொடியுடன் ஊர்வலமாக வந்து அவரது உடலுக்கு மூவர்ணக் கொடி மூர்த்தி சல்யூட் அடித்து வீர வணக்கம் செலுத்தினர்.



அப்போது தாராபுரம் கோட்டாட்சியர் வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...