சுதந்திர தின விழா கொண்டாட்டம் - வ.உ.சி மைதானத்தில் தேசிய கொடியை ஏற்றினார் மாவட்ட ஆட்சியர்

கோவையில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் மூவர்ண கொடியை ஏற்றி, காவல்துறை அதிகாரிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து மாணவ, மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளுடன் நாட்டின் 76ஆவது சுதந்திர தின விழா கோலாகலமா கொண்டாடப்பட்டது.



கோவை: வ.உ.சி மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பல்வேறுதுறைகளில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பதக்கங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.



சுதந்திர தினத்தை ஒட்டி கோவை வ.உ.சி மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.



இதில் மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தேசியக் கொடி ஏற்றி வைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளில் சார்பில் சிறப்பாக செயல்பட்ட அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களும், காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவலர்களுக்கு பதக்கங்களையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.



அதன்படி, கோவை மாநகர காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் - 36 பேர், கோவை மாவட்ட காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் - 73 பேர் அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் - 153 பேர்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



பின்னர் காந்திமாநகர் அரசு மேல்நிலைப்பள்ளி‌, அரசூர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட பள்ளி மற்றும் கல்லூரியைச் சேர்ந்த 350 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டத்தைச் சேர்ந்த தேசப்பற்றாளர்கள் பொதுமக்கள் என அனைவரும் திரளாக கலந்து கொண்டு சுதந்திர தின விழாவினை சிறப்பித்தனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...