இந்திய தேசிய கொடி உருவான வரலாறு - தத்ரூபமாக அணிவகுத்த பள்ளி மாணவ மாணவிகள்

கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற மூன்று வர்ணங்களில் நடுவில் வந்தே மாதரம் பொறிக்கப்பட்ட முதல் கொடி முதல் இறுதியாக ஒரே அளவிலான காவி, வெள்ளை, பச்சை வண்ண பட்டைகளுடன், நடுவில் நீல நிறத்திலான அசோக சக்கரம் தாங்கிய கொடியை பிடித்தபடி மாணவர்கள் தத்ரூபமாக அணி வகுத்து நின்றனர்.


கோவை: இந்திய திருநாட்டின் தேசிய கொடி உருவான வரலாற்றை சுதந்திர தின விழாவில் பள்ளி மாணவர்கள் அணிவகுந்து நின்றனர். இந்தநிகழ்ச்சியில், ஆஸ்ரம் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் மற்றும் நிர்வாகி கவுரி உதயேந்தி்ன் உட்பட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய நாட்டின் 77 வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவையில் கோவைபுதூர் பகுதியில் உள்ள ஆஸ்ரம் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் இந்திய தேசிய கொடி உருவான வரலாற்றை தத்ரூபமாக பள்ளி மாணவர்கள் அணிவகுத்து நின்றனர்.



இதில் கடந்த 1857, முதல் 1904, 1907, 1908, 1917 என பல ஆண்டுகளாக உருமாறி இறுதியாக 1947 ஆம் ஆண்டு தேசிய கொடி உருவான விதத்தை தத்ரூபமாக அணிவகுத்து நின்றனர்.



இதில் 1907ஆம் ஆண்டின் கொடியான பச்சை, மஞ்சள், சிவப்பு என்ற மூன்று வர்ணங்களில் நடுவில் வந்தே மாதரம் பொறிக்கப்பட்ட முதல் கொடி முதல் இறுதியாக ஒரே அளவிலான காவி, வெள்ளை, பச்சை வண்ண பட்டைகளுடன், நடுவில் நீல நிறத்திலான அசோக சக்கரம் தாங்கிய கொடியான இந்திய நாட்டின் தேசிய கொடியை பிடித்த படி மாணவர்கள் தத்ரூபமாக அணி வகுத்து நின்றனர்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரம்மாண்ட தேசிய கொடி பள்ளி வளாகம் முழுக்க பறக்க விடப்பட்டது.

நம் தேசியக் கொடியின் அணிவகுப்பு தேசியக் கொடியின் வரலாற்றை பிரதிபலிக்கச் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் ஆஸ்ரம் பள்ளியின் தாளாளர் தேவேந்திரன் மற்றும் நிர்வாகி கவுரி உதயேந்தி்ன் உட்பட பள்ளி மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை வடக்கு-பீளமேடு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணி வைத்த இருவர் கைது

கோவை வடக்கு மற்றும் பீளமேடு ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் அலுமினிய ஏணியை வைத்த வழக்கில் ரயில்வே பாதுகாப்புப்...

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த நபருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை

திருப்பூர் மாவட்டம் காரப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தன் (52) தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்ததோடு, 4 கிலோ கஞ்சா வ...

பொள்ளாச்சி ஆழியாறு பகுதியில் மது போதையில் தள்ளி இளைஞர் கொலை - குற்றவாளி கைது

பொள்ளாச்சி வட்டம் ஆழியாறு நெல்லித்துறை பகுதியில் குடும்ப பூசல் காரணமாக மது போதையில் வந்த ஆனந்த் என்பவர் பாலகிருஷ்ணனை தள்...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாம்பு தோன்றி பரபரப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் அறையில் நேற்று எதிர்பாராதவிதமாக பாம்பு ஒன்று தோன்றியதால் பரபரப்...

மூளைச்சாவடைந்த இளைஞரின் உறுப்பு தானம் மூவருக்கு புதுவாழ்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே உள்ள வெஞ்சமடை பகுதியைச் சேர்ந்த 22 வயது இளைஞர் கருப்புசாமி மே 10ஆம் தேதி இருசக்...

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...