பள்ளி குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டது

தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டு கோவையில் மட்டும் 12.65 லட்சம் பள்ளி மாணவர்கள், குழந்தைகள், பெண்களுக்கு குடற்புழு நீக்க மருந்து வழங்க இலக்கு நிர்ணியிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.



கோவை: அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும் 24ஆம் தேதி மாத்திரை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் இன்றைய தினம் குடற்புழு நீக்க சிறப்பு முகாம் அனைத்து இடங்களிலும் நடைபெறுகிறது. விடுபட்ட குழந்தைகளுக்கு, வரும், 24 ம் தேதி மருந்து வழங்கப்படும். 1 வயது முதல், 19 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 20 – 30 வரையிலான பெண்களுக்கு, குடல்புழு நீக்க மருந்து(அல்பெண்டசோல்) வழங்கப்படுகிறது.



கோவை மாவட்ட சுகாதார துறை சார்பில், கோவை, மாவட்டத்தில் உள்ள அரசு, மாநகராட்சி மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவுக்குப் பின் குடற்புழு நீக்க மருந்து மாத்திரை வழங்கப்படுகிறது.

கோவை மாவட்ட சுகாதார பணி அதிகாரிகள் கூறுகையில், மாவட்டத்தில் உள்ள, 985 தனியார், 1,070 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், 1,697 அங்கன்வாடி மையங்கள், 150 கல்லுாரிகள், 89 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 328 துணை சுகாதார நிலையங்கள் மூலம் மாத்திரை முதற்கட்டமாக வழங்கப்பட்டுள்ளது.

இதில் விடுபட்ட குழந்தைகளுக்கு வரும், 24 ம் தேதி வழங்கப்படும். மாவட்டத்தில், 12.65 லட்சம் குழந்தைகள், பெண்களுக்கு மாத்திரை வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...