கோவையில் முதன்முறையாக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன பிரசவ மையம் துவக்கம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் அதிநவீன பிரசவ மையம் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு தளம் முழுவுதும் ஒதுக்கப்பட்டுள்ள இம்மையத்தில் கடந்த சில தலைமுறைகளாக காணப்படும் பிரசவச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட உள்ளது.


கோவை: அதிநவீன பிரவச மையத்தில் நிபுணத்துவம் வாய்ந்த மகளிர் சிகிச்சை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபடுத்த உள்ளனர்.

கோவை புது சித்தாபுதூரில் உள்ள ராமகிருஷ்ணா மருத்துவமனையில், அதிநவீன பிரசவ மையம் தொடக்க விழா, மருத்துவமனை வளாகத்தில் இன்று (18.08.2023) நடைபெற்றது.



எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, இணை நிர்வாக அறங்காவலர் ஆர்.சுந்தர் தலைமை வகித்து, மருத்துவ மையத்தை தொடங்கி வைத்தனர். எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை இயக்க அலுவலர் ஸ்வாதி ரோஹித் வழிகாட்டுதலின் படி இம்மையம் தொடங்கப்பட்டுள்ளது.

"பிரசவங்கள் இதற்கு முன் மருத்துவ உதவியின்றி செய்யப்பட்டது. இம்மையத்தில் கடந்த சில தலைமுறைகளாக காணப்படும் பிரசவச் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்பட உள்ளது.

பொதுவாக 85 முதல் 90 சதவீத பிரசவங்கள், சுகப் பிரசவங்களாக உள்ளன. மீதமுள்ள 10 முதல் 15 சதவீதம் பிரசவங்களுக்கே மருத்துவ உதவிகள் தேவைப்படுகின்றன.



இந்நிலையில் ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மிகுந்த பாதுகாப்புடன் பிரசவம் பார்ப்பதற்கு சிறப்பு மையம் தொடங்கப்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாக கருவுற்ற தாய்மார்களுக்கு பிரசவத்திற்கு இம்மருத்துவமனை உறுதுணையாக உள்ளது.



தற்போது தொடங்கப்பட்டுள்ள அதிநவீன பிரசவ மையத்திற்கு ஒரு தளம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ளது.



தாய்மார்களுக்கு பாதுகாப்பு அளிப்பது மட்டுமின்றி, தங்கள் வீட்டில் இருப்பதைப் போன்ற அனுபவத்தை இம்மருத்துவமனை ஏற்படுத்தி தந்துள்ளது. இச்சேவையில் நிபுணத்துவம் வாய்ந்த மகளிர் சிகிச்சை மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் செவிலியர்கள், பிசியோதெரபிஸ்ட்கள், மயக்க மருந்து நிபுணர்கள் அடங்கிய குழுவினர் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

Newsletter

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...

20 சுகாதாரக் குறியீடுகளில் சிறப்புச் செயல்பாடு: கோவை ஆட்சியருக்கு முதலமைச்சர் விருது

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், அனைத்து 20 சுகாதாரக் குறியீடுகளிலும் கோயம்புத்தூர் மாவட்டம் சிறப்பா...

சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை ஆய்வு செய்த பாஜக தேசிய செயலாளர் அரவிந்த் மேனன்

கோவை சாய்பாபா காலனி மேம்பாலப் பணிகளை பாஜக செயலாளரும், தமிழகத்திற்கான துறைகள் மற்றும் திட்டங்களுக்கான தேசிய பொறுப்பாளருமா...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 38.29 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 40.3 அடியாகவும் உயர...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்ட அணைகளில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஆழியாறு அணை 56.3 அடி, பரம்பிக்...

வானம்பாடி இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் புவியரசு காலமானார்

இருமுறை சாகித்திய அகாடமி விருது பெற்ற புகழ்பெற்ற எழுத்தாளரும் கவிஞருமான தோழர் புவியரசு செவ்வாய்க்கிழமை காலை தனது 96வது வ...