கோவையில் நடைபெற்ற மகளிர் உரிமை திட்ட முகாமில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவு - மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட முதல் மற்றும் இரண்டாம் கட்ட முகாம்களில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.



கோவை: ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் பெற்று பதிவு செய்ய தவறியவர்கள் பதிவு செய்ய 18.08.2023, 19.08.2023, 20.08.2023 ஆகிய 3 தினங்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

கோவையில் மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிருக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் செப்டம்பர் மாதம் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற இரண்டு கட்டமாக விண்ணப்பங்கள் பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, முதல் கட்ட விண்ணப்பப் பதிவு முகாம் 24.07.2023 முதல் 04.8.2023 வரையிலும், இரண்டாம் கட்ட முகாம் 05.08.2023 முதல் 16.08.2023 வரையிலும் நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் முதல் மற்றும் இரண்டாம் கட்டமாக நடைபெற்ற 1401 முகாம்களில் இதுவரை ஆனைமலையில் 42,731 விண்ணப்பங்களும், அன்னூரில் 43,509 விண்ணப்பங்களும், கோயம்புத்தூர் (வடக்கு)-ல் 1,60,160 விண்ணப்பங்களும், கோயம்புத்தூர் தெற்கு-ல் 75,409 விண்ணப்பங்களும், கிணத்துக்கடவில் 23,346 விண்ணப்பங்களும், மதுக்கரையில் 61,827 விண்ணப்பங்களும், மேட்டுப்பாளையத்தில் 58,072 விண்ணப்பங்களும், பேரூரில் 76,025 விண்ணப்பங்களும், பொள்ளாச்சியில் 62,306 விண்ணப்பங்களும், சூலூரில் 73,300 விண்ணப்பங்களும், வால்பாறையில் 12,577 விண்ணப்பங்களும் என மொத்தம் 11 வட்டங்களில் நடைபெற்ற முகாம்களில் 6,89,262 விண்ணப்பங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன.

இம்முகாம்களில் குடும்ப அட்டைதாரர்கள் சில காரணங்களினால் விண்ணப்ப படிவம் பெறாமலும், சில குடும்ப அட்டைதாரர்கள் விண்ணப்ப படிவம் பெற்றும் ஒதுக்கீடு செய்யப்பட்ட முகாம்களில் சமர்ப்பிக்காமலும் இருப்பது தெரிய வருகிறது.

மேலும் முதலமைச்சர் உத்தரவின்படி வருவாய்த் துறையின் கீழ் மாற்றுத்திறனாளிகள், ஓய்வூதியம் பெறும் மாற்றுத்திறனாளிகள் தவிர, அக்குடும்பத்தில் உள்ள தகுதி வாய்ந்த பெண்களும், இந்திரா காந்தி முதியோர் ஓய்வூதிய தேசியத் திட்டம், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம் மற்றும் அமைப்புச்சாராத் தொழிலாளர் நல வாரியம் ஆகிய திட்டங்களில் முதியோர் ஓய்வூதியம் பெறும் குடும்பங்களில் உள்ள ஓய்வூதியதாரர் அல்லாத தகுதி வாய்ந்த பெண்களும் மற்றும் ஏற்கனவே விண்ணப்பம் பெற்று பதிவு செய்ய தவறியவர்கள் பதிவு செய்ய 18.08.2023, 19.08.2023, 20.08.2023 ஆகிய 3 தினங்கள் சிறப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.

மேற்கண்ட வகை குடும்பங்களில் உள்ள மகளிர் ஏற்கனவே விண்ணப்பதிருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்காத தகுதிவாய்ந்த மகளிர் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. ஏற்கனவே முதல் மற்றும் இரண்டாம் கட்டங்களாக முகாம்கள் நடைபெற்ற அதே இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளது. விண்ணப்ப படிவங்கள் பெறாத குடும்ப அட்டைதாரர்கள் அவர்களுக்குரிய முகாம் நடைபெறும் இடங்களில் முகாம் பொறுப்பு அலுவலரிடம் விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து அதே முகாமில் அளிக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...