கோவையின் வளர்ச்சிக்காக பாடுபட்ட தலைவர்களுடைய புகைப்படங்கள் பெயர் பலகையுடன் திறப்பு!

ஆர்.எஸ்.புரம் அடுத்த டி.பி.ரோட்டில் ‘லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர்’ என்ற பெயரில் கோவையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட 30 தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன. மேலும் 30 தலைவர்களின் படங்களை காட்சிபடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகராட்சி ஆணையர் தகவல்.



கோவை: ஆர்.எஸ்.புரம் அடுத்த டி.பி.ரோட்டில் கோவையின் வளர்ச்சிக்கு பாடுபட்ட தலைவர்களின் புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் காட்சிபடுத்தப்பட்டு உள்ளன.

சென்னைக்கு அடுத்தபடியாக தொழில், கல்வி, மருத்துவம் என அனைத்து துறைகளிலும் வளர்ந்த நகரமாக கோவை திகழ்கிறது. இதற்கு பல்வேறு தரப்பினரின் உழைப்பும், பங்களிப்பும் முக்கிய காரணம்.

இதற்கு காரணமான மூத்த முன்னோடிகளை இன்றைய தலைமுறையினர் அறியும் விதமாக ஆர்.எஸ்.புரம் டி.பி.ரோட்டில் லெஜண்ட்ஸ் ஆப் கோயம்புத்தூர் என்ற பெயரில் புகைப்படங்களுடன் கூடிய தகவல்கள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பிரதாப் கூறியதாவது, கோவை மாநகரம் பலரின் உழைப்பு, பங்களிப்பின் மூலமாக வளர்ந்த ஒரு நகரமாகும். ஒரு சிறிய நகரமாக இருந்து, இன்று தமிழகத்தின் 2-வது பெரிய மாநகராட்சியாக உயர்ந்துள்ளது.

கோவை மாநகராட்சி நிர்வாகம், பொலிவுறு திட்டத்தின் (ஸ்மார்ட் சிட்டி) கீழ் பல்வேறு திட்டபணிகளை மேற்கொண்டு வருகிறது. மாநகராட்சி பகுதிகளில் மாதிரி சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக ஆர்.எஸ்.புரம் டி.பி.சாலையின் இருபுறங்களிலும் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகர் உருவாவதற்கு காரணமான பல தலைவர்கள் தங்களது அறிவு, நேரம், பொருட்கள் போன்றவற்றை செலவழித்துள்ளனர்.



அவர்களை நினைவு கூறும் வகையிலும், பெருமைபடுத்தும் வகையிலும், மக்கள் அவர்களை தெரிந்து கொள்ளும் வகையிலும் கோவை நகரை சேர்ந்த தொழிலதிபர்கள், பண்டைய கால நகர தலைவர்கள் உள்ளிட்டோரின் புகைப்படங்கள், அவர்கள் குறித்த தகவல்களை காட்சிக்கு வைக்கும் பணி தொடங்கி உள்ளது.



தற்போது 32 பலகைகளில் இந்த காட்சிகள் வைக்கப்பட்டு உள்ளன. இன்னும் 30 பலகைளில் கோவை நகரை வளர்த்தவர்களின் புகைப்படங்கள், அவர்களது தகவல்களை வைக்க திட்டமிட்டுள்ளோம். மொத்தமாக 62 பலகைகளில் இந்த தகவல்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன.

இதில் விடுபட்டுள்ளவர்கள் குறித்த விவரங்களை மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். மேலும் பழங்காலத்தில் கோவையில் இருந்த இயற்கை சார்ந்த இடம், பழமை வாய்ந்த கட்டிடங்கள் குறித்த தகவல்களை தகவல் பலகைகளில் வைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து வருகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த தகவல் பலகைகளை அந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் நின்று பார்த்து படித்து சென்று வருகின்றனர்.

Newsletter

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...