முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சென்னை: தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய், அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை அவர்களின் அலுவலகத்தில் நேரில் சந்தித்தார்.

தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்த அதிமுக எம்எல்ஏக்களை சந்தித்து நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த சந்திப்பு நடைபெற்றதாக கூறப்படுகிறது. அப்போது, எஸ்.பி. வேலுமணி ஆதரவு எம்எல்ஏக்களை முதல்வர் விஜய்க்கு எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் அறிமுகப்படுத்தி வைத்தனர்.

சமீபத்திய தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில், எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான அணியை தொடர்ந்து சந்தித்து தவெகாவை வலுப்படுத்தும் முயற்சியில் கட்சியின் முக்கிய தலைவர்கள் ஈடுபட்டு வருவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது அதிமுகவின் முக்கிய நபர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையில் முதல்வர் விஜயுடனான சந்திப்பு அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

Newsletter

கோவை 27வது வார்டு பீளமேடு பகுதியில் வாய்க்கால், சாக்கடை சுத்திகரிப்பு பணிகள் நடைபெற்றன

கோயமுத்தூர் மாநகராட்சி வார்டு 27ல் இன்று வாய்க்கால் மற்றும் சாக்கடை சுத்தம் செய்யும் பணிகளை கவுன்சிலர் அம்பிகா தனபால் நே...

கோவையில் தீவிர டெங்கு கொசு ஒழிப்பு: வீடு வீடாக ஆய்வு மற்றும் புகை மருந்து தெளிப்பு பணிகள்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, குனியமுத்தூர் கோகுலம் நகர் மற்றும்...

FMSCI இந்திய தேசிய ராலி ஸ்பிரிண்ட் சாம்பியன்ஷிப் வென்ற SRIT மாணவர் கதிரொளி

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர் எஸ். கதிரொளி, FMSCI இந்திய தேசிய ராலி ஸ்ப...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையில் நீர்மட்டம் 37.6 அடியாகவும், திருமூர்த்தி அணையில் 38.44 அடியாகவும் உயர்ந்துள்ளது....

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூன் 26...

சிங்கநல்லூரில் போதைப்பொருள் எதிர்ப்பு தெருக்கூத்து: SRIPMS மாணவர்கள் விழிப்புணர்வு

சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, SRIPMS செவிலியர் கல்லூரி மற்றும் NSS இணைந்து சிங்கநல்லூர் பேருந்து நி...