நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை - குடியிருப்பு வாசிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை அறிவுரை

கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் நள்ளிரவில் ஒற்றை யானை உணவு தேடி குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் வந்துள்ளது. இது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.



கோவை: உணவு தேடி நள்ளிரவில் குடியிருப்பு பகுதிக்குள் ஒற்றை காட்டுயானை ஒன்று புகுந்துள்ளது. இதனால் குடியிருப்பு வாசிகள் இரவில் வெளியே வரும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

கோவை ஆனைகட்டி மலைப் பகுதிகளில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. இவைகள் அவ்வப்போது உணவு தேடி மலை அடிவாரப் பகுதிகளான மாங்கரை, தடாகம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் வந்து செல்வது வழக்கம்.

அதேபோல் இன்று அதிகாலை 1.30 மணியளவில் கோவை துடியலூர் அருகே கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3 பகுதியில் ஒற்றை யானை உணவு தேடி குடியிருப்புகள் நிறைந்த பகுதிக்குள் வந்துள்ளது. இது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

இரவில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Newsletter

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...

ஈமு கோழி மோசடி வழக்கு: இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை - கோவை டான்பிட் நீதிமன்றம் தீர்ப்பு.

ஈமு கோழி பண்ணை முதலீட்டு மோசடி வழக்கில் 115 பேரிடம் ரூ.2.37 கோடி மோசடி செய்ததாக குற்றம் நிரூபணமான நிலையில், இருவருக்கு த...

கோவையில் 1.03 லட்சம் தெருவிளக்குகள் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சிக்குட்பட்ட 100 வார்டுகளில் உள்ள 1,03,755 தெருவிளக்குகளின் செயல்பாடு குறித்து சிறப்பு ஆய்வு மேற்க...

கல்வி உதவித்தொகை மோசடி: கோவை போலீஸ் எச்சரிக்கை

கல்வி உதவித்தொகை வழங்குவதாக கூறி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் வங்கி விவரங்கள், OTP எண்கள் மற்றும் முன்பணம் கேட்டு மோ...

கோவையில் கோவில் சிலை திருட்டில் ஈடுபட்ட நபரை கையும், களவுமாகப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைப்பு

கோவை பெரியநாயக்கன்பாளையம் மகாமாரியம்மன் கோவிலில் ரூ.50,000 மதிப்புள்ள வெண்கல விநாயகர் சிலையை திருடிச் செல்ல முயன்ற நபரை...