பல்லடம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் மனு!

பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை அருகே சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டுள்ள அடாவடியாக செயல்படும் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.



திருப்பூர்: பல்லடம் அடுத்த திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள அடாவடிக்கு பெயர்போன ஆக்கிரமிப்பு டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து பொதுமக்கள் மனு அளித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோவை - திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகே கொச்சின் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1830 டாஸ்மாக் மதுக்கடை. அடாவடிக்கு பெயர்போன இந்த டாஸ்மாக் கடையினால் பொதுமக்கள், பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.

மேலும், மதுப்பிரியர்கள் போதையில் சாலையிலேயே அலங்காலமாக படுத்துக் கிடப்பதோடு சாலையில் செல்வோரிடம் அடாவடி செயலில் ஈடுபட்டுவருவதாக பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.

இதனை வலியுறுத்தி தொடர்ச்சியாக போராட்டங்கள் நடத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்து வந்தனர். இதனிடையே அடாவடிக்கு பெயர்போன டாஸ்மாக் கடை எண் 1830 நெடுஞ்சாலையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டப்பட்டுள்ளது.

இதனால் சாலையின் குறுக்கே வாகனங்களை தாறுமாறாக நிறுத்தி போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும், உடனடியாக நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...