மியூசிக் அகாடமி ஆரம்பிக்கும் ஹிப் ஹாப் ஆதி - ஆளுநரிடம் பட்டம் பெறுவதற்கு முன்பு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேட்டி

மியூசிக் அகாடமி ஆரமிக்கும் எண்ணம் இருப்பதாக திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதி கூறியுள்ளார். அதற்கு முன்னோட்டமாகவே முனைவர் படிப்பு முடித்து இருப்பதாகவும் அவர் விளக்கமளித்தார்.



கோவை: தமிழர் நலனுக்கு எதிராக இருப்பதாக கூறும் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் வாங்குவது குறித்து ஹிப் ஹாப் ஆதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், முனைவர் பட்டத்தை கவர்னரிடம் தான் வாங்க வேண்டும், அதற்கு வேறு மாற்று இல்லை என தெரிவித்தார்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 38வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெறுகிறது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டு பட்டங்களை வழங்குகிறார்.

இதில் திரைப்பட இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப்ஹாப் ஆதியும் முனைவர் பட்டம் பெறுகிறார்.



இந்நிகழ்வில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இசை தொடர்பாக ஐந்தாண்டு ஆராய்ச்சி செய்து வந்தாகவும், இப்போது அது நிறைவுற்று இருப்பதாகவும் கூறினார்.

முனைவர் பட்டம் வாங்குவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். வேறு வேலை பார்த்துக்கொண்டே படிப்பது கடினமாக இருந்ததாகவும், அடுத்த இரண்டு மூன்று மாதங்களில் புதிய படம் வரும் எனவும் தெரிவித்தார்.

தொடர்ச்சியாக தமிழர் நலனுக்கு எதிராக இருக்கும் ஆளுநரிடம் பட்டம் வாங்குவது குறித்த கேள்விக்கு, முனைவர் பட்டத்தை கவர்னரிடம் தான் வாங்க வேண்டும், அதற்கு வேறு மாற்று இல்லை என பதிலளித்தார்.

மேலும் சந்திராயன் 3 இந்தியாவிற்கே பெருமை சேர்க்கும் விதமாக இருக்கின்றது என்றும் கூறினார். மியூசிக் அகாடமி ஆரமிக்கும் எண்ணம் இருக்கிறது என கூறிய அவர், அதற்கு முன்னோட்டமாகவே முனைவர் படிப்பு முடித்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...