அரசாணை 293 அமல்படுத்த வேண்டும் - கருப்பு பேட்ஜ் அணிந்து அரசு மருத்துவர்கள் உள்ளிருப்பு போராட்டம்

கோவை அரசு மருத்துவமனையில் அரசாணை 293 அமல்படுத்தக் கோரியும்,ஊதிய உயர்வு தமிழக அரசு வழங்க வேண்டியும் 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் தங்களின் போராட்டத்தால் நோயாளிகளுக்கு எந்த சிரமமும் ஏற்படவில்லை என தெரிவித்தனர்.



கோவை அரசு மருத்துவமனையில் அரசாணை 293 அமல்படுத்தக் கோரியும்,ஊதிய உயர்வு தமிழக அரசு வழங்க வேண்டியும் 30-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த உள்ளிருப்பு போராட்டமானது தமிழகம் முழுவதும் நடைபெற்ற வருகிறது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் ரவிசங்கர், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவ கல்லூரிகளின் என தமிழகம் முழுவதும் பல்வேறு மருத்துவங்களில் பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அரசாணை 293 தமிழக அரசால் வெளியீட்டு இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் அமல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார். பலமுறை சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தும் எந்த விதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

வருகின்ற மாதத்தில் சம்பளத்துடன் சேர்ந்து உரிய ஊக்கத்தொகையும், ஊதிய உயர்வை வழங்க வேண்டும்.. அரசாணை அமல்படுத்தும் வரை இந்த உள்ளிருப்பு போராட்டமானது தொடரும் என தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் தெரிவித்துள்ளனர். நோயாளிகளுக்கு எந்த விதமான இடையூர் இல்லாதவாறு இந்த போராட்டம் நடைபெற்று வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...

இருகூரில் செல்போன் பறிப்பு: பொதுமக்கள் துரத்தி இருவர் கைது

கோவை இருகூர் அருகே மகாத்மா காந்தி ரோடு ஜங்ஷனில் ராம்குமாரிடம் இருந்து செல்போன் பறித்த இருவர், பொதுமக்கள் துரத்தியதில் சி...

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...