மத்திய அரசுக்கு எதிர்ப்பு..!! திருப்பூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்.!

விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மையை கண்டித்து திருப்பூரில் சாலைமறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



திருப்பூர்: விலையை குறைக்க, வேலை கிடைக்க, ஊழல் நிறைந்த மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிராக நடைபெற்ற சாலை மறியலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டனர்.



நாட்டு மக்களின் கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வு, வேலை இன்றி கலங்கி தவிக்கும் வேலையில்லாத இளைஞர்கள், ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக, மத்திய அரசை கண்டித்து, வேலை கொடு, விலையை குறைத்திடு என்ற கோஷத்துடன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருப்பூர் மத்திய கலைஞர் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விலையை குறைக்க, வேலை கிடைக்க, ஊழல் நிறைந்த மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட 300க்கும் மேற்ப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.



மறியல் செய்த அனைவரையும் கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

சிறுவாணி அணை நீர்மட்டம் 12 அடியாக சரிவு - கோவையில் குடிநீர் பாதிப்பு அபாயம்

கோயமுத்தூர் மாநகராட்சியின் பல வார்டுகளுக்கு குடிநீர் வழங்கும் சிறுவாணி அணையின் நீர்மட்டம் தற்போது 12 அடியாக குறைந்துள்ளத...

தமிழக வெற்றி கழகத்தின் வெற்றியை கோவை நீதிமன்ற வளாகம் முன் பட்டாசு வெடித்து கொண்டாடிய வழக்கறிஞர்கள்

கோவையில் தமிழக வெற்றி கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றதை கட்சியின் வழக்கறிஞர் அணியினர் நீதிமன்ற வாயிலில் பட்டாசு வெடித...

கோவை, திருப்பூர் அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை, திருப்பூர் மாவட்ட அணைகளில் டிசம்பர் 5 நிலவரப்படி மழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது; ஆழியாறு, பரம்பிக்குளம், சோல...

எதிர்க்கட்சியாக மக்களின் நலனுக்காக தொடர்ந்து திமுக போராடும் – முதல்வர் மு.க. ஸ்டாலின்

தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து, திமுக தலைவர் முக ஸ்டாலின்  வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களுக்காக சிறப்பாக ஆளும் கட்சியாக...

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...