மத்திய அரசுக்கு எதிர்ப்பு..!! திருப்பூரில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலை மறியல்.!

விலைவாசி உயர்வு மற்றும் வேலையின்மையை கண்டித்து திருப்பூரில் சாலைமறியலில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்ட இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர்.



திருப்பூர்: விலையை குறைக்க, வேலை கிடைக்க, ஊழல் நிறைந்த மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிராக நடைபெற்ற சாலை மறியலில் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் முழக்கமிட்டனர்.



நாட்டு மக்களின் கழுத்தை நெரிக்கும் விலைவாசி உயர்வு, வேலை இன்றி கலங்கி தவிக்கும் வேலையில்லாத இளைஞர்கள், ஆகியவற்றை எடுத்துரைக்கும் விதமாக, மத்திய அரசை கண்டித்து, வேலை கொடு, விலையை குறைத்திடு என்ற கோஷத்துடன் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக திருப்பூர் மத்திய கலைஞர் பேருந்து நிலையம் முன்பாக சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.



பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விலையை குறைக்க, வேலை கிடைக்க, ஊழல் நிறைந்த மோடி தலைமையிலான பாஜக அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என ஒன்றிய அரசுக்கு எதிராக முழக்கமிட்ட 300க்கும் மேற்ப்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.



மறியல் செய்த அனைவரையும் கைது செய்த போலீசார் தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...