சனாதன சர்ச்சை - அமைச்சர் உதயநிதியை கண்டித்து கோவையில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

சனாதனம் மற்றும் இந்து தர்மத்திற்கு எதிராக பேசிய தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கண்டித்து, கோவை செஞ்சிலுவை முன்பாக இந்து முன்னணியை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதியை கண்டித்து கோவையில் இந்து முன்னணியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழகத்தில் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் சனாதனத்திற்கு எதிராக சர்ச்சை கருத்துக்களை பேசி இருந்தார். இதற்கு திராவிட கட்சிகளின் தலைவர்கள் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்தும், கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.



இந்நிலையில் சனாதனத்திற்கு எதிராக பேசிய அமைச்சர் உதயநிதி மற்றும் திராவிட இயக்கங்களை கண்டித்து கோவை செஞ்சிலுவை முன்பாக இந்து முன்னணியினர் 500க்கும் மேற்பட்டோர் கோஷங்களை எழுப்பியபடி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த இந்து முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கிஷோர்குமார் பேசியதாவது,

தொடர்ந்து திமுக இந்து மதத்தைப் பற்றியும், சனாதனத்தை பற்றியும், இழிவாக பேசி வருகிறது. தேர்தல் சமயங்களில் மட்டும் இந்துக்களின் ஓட்டை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் திமுக, ஆட்சிக்கு வந்த பின்பு சனாதனத்தை ஒழிப்பேன் என்று பேசி இருப்பது இந்துக்களின் மனதை புண்படுத்தி இருக்கிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...