மனை வரன்முறை சட்டத்தை 6 மாத காலம் நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பு நன்றி!

கோவை விமான நிலையத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் ஹென்றி, அங்கீகாரம் பெறாத பட்டா மனைகளை வாங்கியுள்ளவர்களுக்காக, மனை வரன்முறை சட்டத்தை 6 மாத காலம் நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தார்.



கோவை: மனை வரன்முறை சட்டத்தை 6 மாத காலம் நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் ஹென்றி நன்றி தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் அகில இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் மற்றும் தேசியத் தலைவர் டாக்டர் ஹென்றி பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் பேசியதாவது,



அங்கீகாரம் பெறாத பட்டா மனைகளை வாங்கி வைத்துள்ள பொதுமக்கள் மனை வரன்முறை சட்டத்தின் கீழ் தங்களின் பட்டா மனைகளை டிடிசிபி அங்கீகாரம் பெறுவதற்கு மேலும் ஒரு வாய்ப்பினை வழங்கும் வகையில், மனை வரன்முறை சட்டத்தை மேலும் ஆறு மாத காலம் கால நீட்டிப்பு செய்த தமிழக அரசுக்கு நன்றி.

மலைகள் பாதுகாப்பு அதிகார குழுமத்தின் பகுதியில் (HACA) அமைந்துள்ள பட்டா மனைகளையும் வரன்முறை சட்டத்தின் கீழ் அங்கீகாரம் பெறும் வகையில் வழிவகை செய்ய வேண்டும்.

பதிவுத்துறையில் பொது அதிகார கட்டணம் மற்றும் கட்டுமான ஒப்பந்தத்திற்கான பதிவு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுக்கு கட்டண உயர்வு, கட்டுனர்களால் புதிய வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு விற்பனை செய்யும் போது முதலில் வீடு வாங்குபவர்களை ஊக்குவிக்கும் வகையில் மனையை மாத்திரம் பதிவு செய்யும் வகையில் வழிவகை இருந்தது.

தற்பொழுது இதனை மாற்றியமைத்து கட்டாயம் மனை மற்றும் கட்டிடத்துடன் தான் பதிவு செய்ய வேண்டும் என்கிற உத்தரவு,போலி ஆவணம் ரத்து சட்டம் சட்டப்பிரிவு 77Aவிற்கு தற்பொழுது நீதிமன்றத்தால் ஏற்பட்டுள்ள தடை.

சொத்தின் மீதான வழிகாட்டி மதிப்பு முரண்பாடு உள்ள பகுதிகளில் குறைவு முத்திரைத் தீர்வை சட்ட பிரிவு 47/A1 இன் கீழ் பதிவு செய்ய மறுப்பு, பதிவு அலுவலகங்களில் பதிவு நடைமுறைகளில் ஏற்பட்டுள்ள நடைமுறைச் சிக்கல்கள்.

நாடு முழுவதும் வழிகாட்டி மதிப்பு பன்மடங்கு உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை குறித்தும் பேசினார்.

Newsletter

140க்கு மேல் இல்லை, எங்கள் கணக்குப்படி 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி – கோவையில் செல்வப்பெருந்தகை

கோவை விமான நிலையத்தில் பேசிய காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, கருத்துக்கணிப்புகள் மக்கள் மனநிலையை மாற்ற முடியாது...

கட்டாஞ்சிமலை: குட்டையில் காருடன் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

கட்டாஞ்சிமலையில் இருந்து தாயனூர் செல்லும் சாலையில் குட்டையில் காருடன் மூழ்கி 25 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் குறித்து ப...

ரயில்வேயில் பணியிடங்கள் குறைப்பு: கோவையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

இந்திய ரயில்வே துறையில் பணியாளர் குறைப்பை கண்டித்து, கோவை ரயில் நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பா...

கோவையில் இன்று மாலை காவல்துறை கொடி அணிவகுப்பு - போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு, கோவை மாநகர காவல்துறை இன்று (02.05.2026) மாலை 4.00 மணி முதல் 5.30 ம...

SRIT-ன் கண்டுபிடிப்பு நடைமுறை தேசிய அளவிலான காபி டேபிள் புத்தகத்தில் இடம்பெற்றது

கோயம்புத்தூரில் உள்ள Sri Ramakrishna Institute of Technology-ன் கல்வி கண்டுபிடிப்பு நடைமுறை "The Higher Education Playbo...

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...