28வது நாளாக தொடரும் நல்லதங்காள் விவசாயிகள் போராட்டம்!

நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் வருவாய்துறை மேல்முறையீட்டை திரும்ப பெற கோரி விவசாயிகள் ரோடு ரோலர் முன்பு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் விவசாயிகள் ரோடு ரோலர் முன்பு தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த பொன்னிவாடி கிராமத்தில் நல்லதங்காள் நீர்த்தேக்க அணை உள்ளது. இந்த அணைக்கு நிலம் கொடுத்த விவசாயிகள் உரிய இழப்பீடு வழங்க கோரி கோனேரிப்பட்டியில் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் 28 வது நாளாக காத்திருப்பு பந்தலில் விவசாயிகள் ரோடு ரோலர் முன்பாக தற்கொலை செய்து கொள்ள போவதாக தமிழக அரசு மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் குறித்து விவசாயி பாலசுப்பிரமணியன் கூறியதாவது, நல்லதங்காள் அணை கட்டுமான பணிக்காக 150 விவசாயிகளிடமிருந்து 750 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தவர்களுக்கு நீதிமன்றம் தீர்ப்பு வந்தும் இழப்பீடு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் வருவாய் துறை அதிகாரிகள் வழக்கை மேல்முறையீடு செய்தனர். எனவே மேல்முறையீட்டை திரும்ப பெற வலியுறுத்தி, ரோடு ரோலர் முன்பாக எங்களை நசுக்கி தற்கொலை செய்து கொள்ளப் போவதாக போராட்டம் நடத்துகிறோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...