அடிப்படை வசதிகளை செய்து தராவிட்டால் அடையாள அட்டைகளை திருப்பி அளிப்போம் - கோவை அறிவொளி நகர் மக்கள் அறிவிப்பு

அடிப்படை வசதிகள், மற்றும் சுகாதார வசதிகள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோவை மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.


கோவை: அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தராவிட்டால், ஆதார் அட்டை, குடும்ப அட்டை ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வீசிவிடுவோம் என பொதுமக்கள் எச்சரிக்கை விடுத்தனர்.



அடிப்படை வசதிகள், மற்றும் சுகாதார வசதிகள், குடிநீர் பிரச்சனையை தீர்க்க வலியுறுத்தி கோவை மதுக்கரை நகராட்சிக்கு உட்பட்ட அறிவொளி நகர் சமத்துவபுரம் பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால், ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.



இது குறித்து கூறிய அவர்கள் சுகாதார சீர்கேட்டால் குழந்தைகள் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாகவும் உடனடியாக அங்கே மருத்துவ முகாம் அமைக்க வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைக்கு தீர்வு எட்டப்படவில்லை என்றால் தங்களுடைய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாள உள்ளிட்ட அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் வீசி செல்வோம் எனவும் தெரிவித்து சென்றனர்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...