கோவை வந்தடைந்தன தித்திக்கும் மாம்பழங்கள்

மாம்பழத்தை விரும்பாதவர் மாநிலத்தில் உண்டோ! என்ற கூற்றுக்கேற்ப குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் பழம் மாம்பழம். கோடை காலத்தின் தொடக்க நேரத்தில் மாம்பழங்கள் நம் ஊர் மார்க்கெட்டுகளில் இடம்பிடிக்கிறது. தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே மாம்பழ சீசன் தொடங்கியுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.



சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்கள் அதிக வெப்ப நிலை கொண்ட மாவட்டங்கள் ஆகும். இங்கு தான் அதிக அளவில் மாம்பழங்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு மொத்தமாக சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாம்பழங்கள் பயிரிடப்படுகின்றன.



இம்மாவட்டங்களில் உற்பத்தியான மாம்பழங்கள் தற்போது உண்பதற்கு தயாரான நிலையில் கோவை மார்கெட்டுகளில் இறங்கியுள்ளன. இருந்த போதும் கடந்த அண்டை விட இந்தாண்டு மாம்பழ வரத்து குறைவாக உள்ளதாகவும், அதனால் வியாபாரம் மந்தமான நிலையில் இருப்பதாகவும் கோவை மொத்த வியாபாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.



இது குறித்து உக்கடம் பகுதியில் பழ மண்டி வைத்திருக்கும் வியாபாரி ஷாஜகான் கூறியதாவது:-

வழக்கமாக மாம்பழ வரத்து பிப்ரவரி மாதம் தொடங்கி ஜுலை மாதம் வரை இருக்கும். இந்த வருடம் பருவ மழை பொய்த்துப் போனதால் மாங்காய்கள் வரத்து மிகவும் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 75 முதல் 80 சதவிகிதமாக இருந்த மாங்காய் வரத்து தற்போது 35 சதவிகிதமாக குறைந்துள்ளது.



வகைகள்

மாம்பழங்களில் பல்வேறு வகைகள் உள்ளன. அதில், செந்தூரம், நீலம், பங்கனபள்ளி, நெடுஞ்சோலை, இமாம் பசந்த், ஆபூஸ், கிளிமூக்கு போன்ற ராகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. மாங்காய் வரத்து குறைவு என்பதோடு, இந்த ஆண்டு வியாபாரமும் மந்தமான நிலையில் தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.



விலை விபரம்- (கிலோ) (மொத்த வியாபாரம்)

செந்தூரம் - ரூ.60

பங்கனபள்ளி - ரூ.80

நெடுஞ்சோலை - ரூ.60

இமாம் பசந்த் - ரூ.150

ஆபூஸ் - ரூ.120

கிளிமூக்கு - ரூ.20

Newsletter

கோவை ஆனைகட்டியில் பழங்குடியினருக்கான ITI சேர்க்கை: ஜூன் 3 வரை விண்ணப்பிக்கலாம்- கோவை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கோவை ஆனைகட்டியில் அமைந்துள்ள பழங்குடியினருக்கான அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 2026-27 கல்வியாண்டுக்கான சேர்க்கைக்கு ஜூன...

கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போ...

ஆனைகட்டி அருகே உக்ரைன் சுற்றுலா பயணியை விரட்டிய காட்டு யானை

கோவை மாவட்டம் ஆனைகட்டி அருகே ஒற்றை காட்டு யானை விரட்டியதால் உயிர் தப்பிக்க ஓடிய உக்ரைன் நாட்டைச் சேர்ந்த சுற்றுலா பயணி ப...

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...