கவுண்டம்பாளையத்தில் பெண்களிடம் ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய நபர் மீது கைது நடவடிக்கை

கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அரை நிர்வாணமாக நின்று ஆபாச சைகைகள் காட்டி அச்சுறுத்திய 38 வயது நபரை போலீசார் கைது செய்து BNS சட்டப்பிரிவுகள் 78, 79 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.


Coimbatore: கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் பெண்களை குறிவைத்து அநாகரிகமாக நடந்துகொண்ட நபர் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து கைது செய்துள்ளனர். கோவில்மேடு சாந்தி வீதியை சேர்ந்த முருகன் (38) என்பவர் மீது பல பெண்கள் புகார் அளித்ததையடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நேற்று காலை, கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டில் வேலை செய்துகொண்டிருந்தபோது, வீட்டின் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் இருந்து சந்தேகத்திற்கிடமான சத்தம் கேட்டு சென்று பார்த்தபோது அதிர்ச்சிகரமான காட்சியை கண்டுள்ளார். நடுத்தர வயது ஆண் ஒருவர் அரை நிர்வாணமாக நின்றுகொண்டு ஆபாச சைகைகள் செய்துள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டதும், அவரது கணவர் ஓடி வந்ததை பார்த்த சந்தேக நபர் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் உடனடியாக கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் அப்பகுதி மக்களிடம் போலீசார் விசாரித்தபோது, இதே நபர் பல இடங்களில் பெண்களை குறிவைத்து அநாகரிக செயல்களில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, கடந்த பிப்ரவரி மாதம் இதே நபர் குறித்து காவல் கட்டுப்பாட்டு அறைக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

அப்போது விசாரணை நடத்திய போலீசார், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்பட்டதால் எச்சரிக்கை விடுத்து அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், மீண்டும் இதே போன்ற செயல்களில் ஈடுபட்டு வருவதாக பல பெண்கள் புகார் அளித்துள்ளனர்.

நேற்று மீண்டும் பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்டதாக பொதுமக்கள் புகார் அளித்ததையடுத்து, கவுண்டம்பாளையம் போலீசார் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளனர். விசாரணையில், அவர் கோவில்மேடு சாந்தி வீதியை சேர்ந்த முருகன் (38) என்பது தெரியவந்துள்ளது.

போலீசார் முருகனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அவர் மீது BNS சட்டப்பிரிவுகள் 78, 79 மற்றும் தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து முருகனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பகுதி மக்கள் போலீசாரின் விரைவான நடவடிக்கையை பாராட்டி வருகின்றனர்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...