தாராபுரத்தில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தையல் தொழிலாளி போக்சோவில் கைது

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் பகுதியில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய தையல் தொழிலாளியை காவல்துறையினர் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


திருப்பூர்: வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கையிடம் ஆசை வார்த்தை கூறி திருமணத்திற்கு மீறிய உறவில் ஈடுபட்ட தையல் தொழிலாளியின் செயல் அப்பகுதி மக்களை எரிச்சலடைய வைக்கும் வகையில் உள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே குண்டடம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான தையல் தொழிலாளி. இவரது மனைவியின் தங்கை 17 வயது சிறுமி ஆவார்.

சிறுமி அவ்வப்போது தனது அக்காள் வீட்டுக்கு வந்து சென்று வந்துள்ளார். அப்போது தையல் தொழிலாளி தனது மனைவி வீட்டில் இல்லாத நேரத்தில் சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அந்த சிறுமி தனக்கு வயிறு வலிப்பதாக வீட்டில் கூறினார். இதையடுத்து சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனை செய்தனர். அப்போது அந்த சிறுமி 4 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து சிறுமியிடம் கேட்டபோது தனது அக்காள் கணவர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறியுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தந்தை காங்கயம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கோமதி ஆகியோர் விசாரனை மேற்கொண்டு தையல் தொழிலாளியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...