ஜனநாயகத்தை மீட்கக்கூடிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் பேட்டி

மின் கட்டண உயர்வு , நிலை கட்டணம் உயர்வு உள்ளிட்டவை மத்திய மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும் என்று திருப்பூரில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் தெரிவித்தார்.



திருப்பூர்: ஜனநாயகத்தை மீட்கக்கூடிய போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது - நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் INDIA கூட்டணி தனது வலுவான போராட்டத்தை முன்னெடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் கூறியுள்ளார்.

திருப்பூரில் வருகின்ற 18ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு கூட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் இது குறித்து திருப்பூரில் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் பேசியாதவது,



ஜனநாயகத்தில் இல்லாத ஒரு நடைமுறையாக சிறப்பு கூட்டத்தொடரில் எந்த பொருள் குறித்து விவாதம் நடைபெறப்போகிறது என்பது குறித்து இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்தவில்லை. பல்வேறு வதந்திகள் பரவக்கூடிய நிலையில் அது பற்றி தற்போது தெரிவிக்க முடியாத சூழலில் சிறப்பு கூட்ட தொடரில் விலைவாசி ஏற்றம் , வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட வேண்டும்.

ஆனால் அவை மத்திய அரசு செய்யத் துணியாது. நல்ல காலம் பிறக்கப் போவதாக வாக்கு கேட்ட பிரதமர் மோடி ஆட்சியில் அமர்ந்த பிறகு ரேஷன் கடைகளில் 12 ருபாய் 50 பைசாவிற்கு விற்பனை செய்யப்பட்ட சர்க்கரை தற்போது 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுதான் மோடியின் நல்ல காலமா ? என கேள்வி எழுப்பினார்.

திருப்பூரில் பின்னலாடை தொழில் நலிவடைந்து வரக்கூடிய நிலையில் மோடி அரசு அப்புறப்படுத்தினால் மட்டுமே திருப்பூர் தொழில் துறை காப்பாற்றப்படும். தற்போது நடைபெற்று வருவது ஜனநாயகத்தை மீட்க கூடிய போராட்டம். நாடாளுமன்ற சிறப்பு கூட்ட தொடரில் மத்திய அரசுக்கு எதிராக இந்தியா கூட்டணியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் எதிர்ப்பை வலுவாக பதிவு செய்வார்கள்.

மின் கட்டண உயர்வு , நிலை கட்டணம் உயர்வு உள்ளிட்டவை மத்திய மாநில அரசுகள் மறுபரிசீலனை செய்து திரும்பப் பெற வேண்டும். பாரதிய ஜனதா கட்சி தேர்தல் ஆணையத்தை தன்னோடு கூட்டணி சேர்த்து இருக்கிறது.

இந்நிலைமாறி நியாயமான முறையில் தேர்தல் நடைபெறும் என்றால் பாஜக நிச்சயம் தோற்கடிக்கப்படும். இந்தியா கூட்டணி மத்திய தேர்தலில் வெற்றி பெறும் என்ற மத்திய உளவுத்துறையில் தகவலின் காரணமாக பதற்றத்தில் ஏதேதோ செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அவர் தெரிவித்தார்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...