விநாயகர் சதுர்த்தியையொட்டி ஆசியாவிலேயே 2வது உயரமான விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம்!

விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி கோவை புலியகுளத்தில் உள்ள ஆசியாவிலேயே 2வது மிக உயரமான விநாயகர் சிலைக்கு 2 டன் அளவிலான மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிலையின் உயரம் 19 அடி, அகலம் 10 அடி, எடை 190 டன்னாகும்.



கோவை: விநாயகர் சதுர்த்தியையொட்டி புலியகுளத்தில் உள்ள ஆசியாவிலேயே 2வது உயரமான விநாயகர் சிலைக்கு 2 டன் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. சில இடங்களில் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவை புலியகுளம் பகுதியில் உள்ள முந்தி விநாயகர் கோவிலில் இன்று விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அதிகாலை முதலே பல்வேறு அலங்காரங்களால் பூஜைகள் நடத்தப்பட்டு வருகிறது.



இன்று சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு 2 டன் மலர்களால் சிலை அலங்கரிக்கப்பட்டுள்ளது.

இந்த புலியகுளம் விநாயகர் சிலை ஆசியாவிலேயே இரண்டாவது மிக உயரமான சிலையாகும். இதன் உயரம் 19 அடி, அகலம் 10 அடி, எடை 190 டன் என்பது குறிப்பிடத்தக்கது.



இங்கு காலை முதல் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவையில் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதே போல் ஈச்சனாரி விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...