தாராபுரத்தில் உள்ள சவர்மா கடைகளை ஆய்வு செய்ய வேண்டும் - அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்ட சிறுமி உயிரிழந்துள்ள நிலையில், தாராபுரத்தில் உள்ள சவர்மா கடைகளில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.


திருப்பூர்: கெட்டுப்போன பழைய சவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை மூன்று நாள் அல்லது நான்கு நாள் கழித்து சில கடைகளில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

நாமக்கல் மாவட்டத்தில் சவர்மா சாப்பிட்டு 13 மருத்துவக் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறுமி ஒருவர் சவர்மா சாப்பிட்டு உயிரிழந்துள்ளார். மொத்தம் நாமக்கல் மாவட்டத்தில் 43 பேர் சவர்மா சாப்பிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால் நாமக்கல் மாவட்டம் முழுவதும் சவர்மா கடைகள் நடத்த மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உள்ள அனைத்து சவர்மாக்கடைகளையும் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி லலிதாம்பிகை முறையாக ஆய்வு செய்து கெட்டுப்போன (இறைச்சிகளை) பழைய சாரமாக்களை விற்பனை செய்து வரும் சவர்மா கடைகளை நிரந்தரமாக மூட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கெட்டுப்போன பழைய சவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை மூன்று நாள் அல்லது நான்கு நாள் கழித்து சில கடைகளில் விற்பனை செய்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே அதிகாரிகள் உடனடியாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என தாராபுரம் பகுதியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...

கோடைக்காலம்: Pothannur வழித்தடத்தில் Mangaluru-Chennai சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு Karnataka மாநிலம் Mangaluru-இல் இருந்து Chennai Egmore-க்கு Pothannur வழித்தடத்தில் சிறப்பு ரயி...