மீண்டும் கட்சியில் முக்கிய பொறுப்பில் எஸ்.பி. வேலுமணி – கழகப் பொதுச் செயலாளராக அறிவிப்பு..!

கட்சியை மீறி தவெகவுக்கு ஆதரவு தெரிவித்ததால், அனைத்து கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்த எஸ்.பி. வேலுமணிக்கு, மீண்டும் முக்கிய பதவியான கட்சித் துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார்.


கோவை: அதிமுகவில் கட்சியின் முன்னாள் அமைச்சரும் கொங்கு மண்டலத்தின் முக்கிய தலைவருமான S.P. வேலுமணிக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி K. பழனிசாமி இந்த நியமனத்தை அறிவித்துள்ளார்.

அதிமுகவில் பல்வேறு நிர்வாக மாற்றங்களை அறிவித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், முன்னாள் அமைச்சர்கள் S.P. வேலுமணி மற்றும் நத்தம் R. விஸ்வநாதன் ஆகியோருக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.

முன்னதாக, கட்சியை மீறி தவெகாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் S.P. வேலுமணி, C.V. சண்முகம் உள்ளிட்டோர் அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டிருந்தனர். கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவரான S.P. வேலுமணி அனைத்து கட்சிப் பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்பட்டது பெரும் பேசுபொருளாக மாறியிருந்தது.

இந்த நிலையில், தற்போது S.P. வேலுமணிக்கு மீண்டும் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது அதிமுகவில் புதிய அரசியல் சமநிலைக்கான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பில், கட்சியின் அமைப்பு மற்றும் நிர்வாகப் பணிகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் செயல்பட்டு வந்த தலைவர்களுக்கு மீண்டும் பொறுப்புகள் வழங்கப்பட்டிருப்பது, வரவிருக்கும் அரசியல் சூழ்நிலை மற்றும் கட்சியின் ஒற்றுமையை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனங்கள்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...