துடியலூரில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - விதி மீறியதாக பாஜக வினர் மீது வழக்கு பதிவு

துடியலூரில் நடைபெற்ற ஊர்வலத்தில் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், அனுமதி இன்றி ஒலி பெருக்கி கட்டி இடையூறு கொடுத்ததுடன், காவல் துறையினரை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்ததாக உதவி ஆய்வாளர் அருள்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த சஜூ, கிருஷ்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.


கோவை: உதவி ஆய்வாளர் குமார் அளித்த புகாரின் பேரில் பாஜகவைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் நந்தா, பாஜக கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் வத்சலா மற்றும் இளங்கோ உள்ளிட்டோர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. கோவையிலும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இதனையடுத்து நேற்று கோவையில் விநாயகர் சிலை கரைப்பு நிகழ்வு நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 16 இடங்களில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. இதனை முன்னிட்டு விநாயகர் சிலைகளை அப்பகுதி மக்கள், மற்றும் இந்து அமைப்பினர் ஊர்வலமாக கொண்டு வந்து நீர்நிலைகளில் கரைத்தனர்.

அதே சமயம் ஊர்வலத்தின் போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளையும் மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. அதன்படி உரிய அனுமதி பெற்றே ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோவை துடியலூர் பகுதியில் நடைபெற்ற ஊர்வலத்தின் போது பாஜகவினர் பட்டாசு வெடித்தும், அனுமதி இன்றி ஒலி பெருக்கி கட்டி இடையூறு கொடுத்ததுடன், காவல் துறையினரை பணிசெய்ய விடாமல் இடையூறு செய்ததாக உதவி ஆய்வாளர் அருள்குமார் கொடுத்த புகாரின் பேரில் பாஜகவை சேர்ந்த சஜூ, கிருஷ்ணன் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் துடியலூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதே போல் உதவி ஆய்வாளர் குமார் அளித்த புகாரின் பேரில் பாஜகவைச் சேர்ந்த நீலகிரி மாவட்ட பொறுப்பாளர் நந்தா, பாஜக கோவை மாவட்ட மகளிர் அணி தலைவர் வத்சலா மற்றும் இளங்கோ உள்ளிட்டோர் மீதும் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

திருப்பூரில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்ட ஒழிப்புக்கு எதிராக மாற்றுத்திறனாளிகள் போராட்டம்

திருப்பூரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை ஒழிக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து கு...

கோவையில் ‘அமைச்சர் சம்பத்குமார் உறவினர்’ எனக் கூறி பெட்ரோல் பங்க் ஊழியர் மீது தாக்குதல்

கோவை காந்திபுரத்தில் அமைச்சர் சம்பத்குமாரின் உறவினர் எனக்கூறி பாட்டிலில் பெட்ரோல் கேட்ட நபரிடம், அரசு விதிகளின் படி கேனி...

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான குப்பை மேலாண்மை திட்டத்துக்கு தேசிய அளவில் முதலிடம் பெற்றது ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி

Coimbatore-ல் உள்ள ஶ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரி மாணவிகள் தேசிய அளவிலான Hackathon போட்டியில் செயற்கை நுண்...

அதிமுகவில் மீண்டும் உள்கட்சி பரபரப்பு: கட்சிப் பதவிகளை நிராகரித்த எஸ்.பி.வேலுமணி உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள்

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பதவிகளை ஏற்க முடியாது என எஸ்.பி....

சூலூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் - 15ஆம் தேதி நடைபெறும்

கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் வட்டம் வாரப்பட்டி சுல்தான்பேட்டையில் ஜூலை 15ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனா...

போதைப்பொருள் வழக்கில் அமைச்சர் சரத்குமார் பதவி விலக கோரி கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி ஆர்ப்பாட்டம்: 500 பேர் கைது

கோவை துடியலூர் அருகே திமுக மாணவர் அணி 500க்கும் மேற்பட்டோர் தமிழக வெற்றிக் கழக அமைச்சர் சரத்குமார் போதைப்பொருள் பயன்படுத...