தேசிய ஊட்டச்சத்து மாத விழா - கோவையில் சத்துணவு ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வு

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவையொட்டி, கோவை ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் சத்துணவு ஊழியர்கள் மனித சங்கிலி விழிப்புணர்வில் ஈடுபட்டனர்.



கோவை: 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிணைந்து ஊட்டச்சத்துக்கள் குறித்தும், ஊட்டசத்து மாதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

செப்டம்பர் மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதனைமுன்னிட்டு மாதத்தின் துவக்கத்திலிருந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அங்கன்வாடி ஊழியர்களால் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.



அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் திட்டம் 4 சிங்காநல்லூர் வட்டாரம் மற்றும் சர்க்கார் சாமகுளம் வட்டாரம் சார்பில் ராமநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகில் மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில் 100க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் ஒன்றிணைந்து ஊட்டச்சத்துக்கள் குறித்தும், ஊட்டசத்து மாதம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடத்தினர்.



கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பிறந்த குழந்தை முதல் ஆறு வயது வரை குழந்தைகளின் ஊட்டச்சத்தை உறுதி செய்ய இந்த மாதம் முழுவதும் தேசிய ஊட்டச்சத்து மாத விழா நிகழ்ச்சிகள் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...

இந்தியா-நியூசிலாந்து FTA: ஜவுளித் துறைக்கு புதிய வாய்ப்பு

இந்தியா-நியூசிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தை சைமா வரவேற்று, ஜவுளி ஏற்றுமதி, புதிய சந்தை அணுகல் மற்றும் வளர்ச்சி வாய்...

மேட்டுப்பாளையம்: புதிய ரயில்கள், சேவை நீட்டிப்பு; வந்தே பாரத் மேட்டுப்பாளையம் வரை நீட்டிப்பு?

மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து புதிய ரயில் சேவைகள் மற்றும் நீட்டிப்புகளை தெற்கு ரயில்வே முன்மொழிந்து, சுற்றுலா...

எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாட்டால் கோவை தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் முடக்கம்

கோவையில் எல்.பி.ஜி சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. வழக்க...

கோடைக்காலம்: போத்தனூர் வழித்தடத்தில் மங்களூரு-சென்னை சிறப்பு ரயில் இயக்கம்

கோடைக்காலத்தை முன்னிட்டு கர்நாடகா மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூர்க்கு போத்தனூர் வழித்தடத்தில் சிறப்பு ரயில்...