தாராபுரம் உணவகங்களில் உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை - கெட்டு போன உணவு குறித்து ஆய்வு

திருப்பூர் மாவட்டம் தாரபுரம் நகராட்சியில் இயங்கி வரும் ஷவர்மா கடைகள் மற்றும் அசைவ உணவகங்களில் உணவுப்பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி பகுதிகளில் இயங்கி வரும் அசைவ உணவகங்கள் ஃபாஸ்ட் ஃபுட் கடைகளில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்வதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு வாடிக்கையாளர்களிடம் இருந்து தகவல் கிடைத்தது.

அதன்படி திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையில், தாராபுரம் பகுதி உணவு பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் சிரஞ்சீவி, பாலமுருகன், கோடீஸ்வரன் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். தாராபுரம் பேருந்து நிலையம், பொள்ளாச்சி சாலை, அலங்கியம் சாலை, ஐந்து சாலை சந்திப்பு ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்கள், பாஸ்ட்புட் கடைகள், ஷவர்மா கடைகளில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

ஆய்வில் அதிக செயற்கை வண்ணம் கலக்கப்பட்ட 3 கிலோ சிக்கன், 2 கிலோ அளவிலான பரோட்டா, 3 கிலோ அளவிலான பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. பறிமுதல் செய்யப்பட்ட கடைகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் விதிக்கப்பட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டது.



பின்னர், உணவக உரிமையாளர்களிடம் நாள்தோறும் புதிதாக வாங்கப்பட்ட சிக்கன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், ஒருமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய் வகைகளை மீண்டும் பயன்படுத்தக்கூடாது என அறிவுரைகள் வழங்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் அசைவ உணவகங்களில் தரமற்ற சிக்கன் மற்றும் உணவுப் பொருட்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டால் 9444042322 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

PRCI கோயம்புத்தூர் கிளை செயலாளராக முனைவர் ஆதி பாண்டியன் தேர்வு

இந்திய மக்கள் தொடர்பு கவுன்சில் கோயம்புத்தூர் கிளை நிர்வாகக் குழுவில் முனைவர் K.M.G. ஆதி பாண்டியன் செயலாளராக தேர்வு செய்...

அரசு நிர்ணய அளவு மட்டும் ஏற்றுவோம்: கோவை டிப்பர் லாரி உரிமையாளர்கள் நான்கு நாள் அடையாள வேலை நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் டிப்பர் லாரி உரிமையாளர்கள் இன்று முதல் நான்கு நாட்கள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். கிரஷர்...

கோவை ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து..!

கோவை மாவட்டத்தில் ஜூலை 1 முதல் ஆவின் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி ரத்து செய்யப்படுக...

பிரிட்டன் பாராளுமன்றத்தில் கோவை சைக்கிளிஸ்டு விஷ்ணு ராமுக்கு உலக சாதனை விருது

பெண்கள் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக சைக்கிள் பயணம் மூலம் உலக சாதனை படைத்த கோவை சைக்கிளிஸ்...

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து மோதி முதியவர் பலி

கோவை 100 அடி சாலையில் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் 74 வயது முதியவர் உயிரிழந்தார். இந்த விபத்து தொடர்...

நெஞ்சுவலி சிகிச்சையில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனைக்கு சர்வதேச அங்கீகாரம்

மாரடைப்பு மற்றும் நெஞ்சுவலி நோயாளிகளுக்கு சர்வதேச தரத்தில் சிகிச்சையை வழங்குவதில் கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை சிறப...